மலையாள சினிமா மூலம் நடிகையாக அறிமுகம் ஆகி தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சாய் பல்லவி. இவர் பிரேமம் என்ற திரைப்படத்தின்
மூலம் ஒட்டுமொத்த மலையாள மற்றும் தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தனுஷ், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்துள்ளார்.
மேலும், இவருக்கு நடனத்தின் மீது அதிகமான ஆர்வம் இருந்து வந்துள்ளது. இவர் சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கும் நிலையில் பாலிவுட் நடிகர் குல்ஷன் தேவய்யா என்பவர் சமீபத்தில் சாய் பல்லவி பற்றி வெளிப்படையாக ஒரு சில தகவல்களை கூறியுள்ளார். அது என்னவென்றால் எனக்கு சில காலங்களாகவே சாய்பல்லவி பிடித்திருக்கின்றது.
அவருடைய தொலைபேசி எண் என்னிடமிருந்தும் அவரை தொடர்பு கொள்ள எனக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்து வருகின்றது. அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று அவர் வெளிப்படையாக அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்…