நடிகை நயன்தாரா மலையாள சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு தமிழ் சினிமாவில் நடித்து தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை தென்னிந்தியாவில் பிடித்திருக்கின்றார். இவர்கிட்டத்திட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடிகையாக நடித்து வருகின்றார். இன்னும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்துடன் வளம் வந்து கொண்டிருக்கின்றார்.
இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு தற்பொழுது இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றார்கள். நடிகை நயன்தாரா திருமணத்திற்கு
பின்பும் தொடர்ந்து சினிமாவில் நடித்த வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக திருமணம் ஆன நடிகைகள் அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி விடுவார்கள். ஆனால், நயன்தாரா அப்படி கிடையாது தொடர்ச்சியாக நடித்து வருகின்றார்.
இப்படி இருக்கும் நிலையில் புது இயக்குனர் இயக்கத்தில் நடிகர் மாதவன் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த திரைப்படத்திற்கு நடிகை நயன்தாரா ஜோடியாக நடிக்கப் போவதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த திரைப்படத்தில் நடிகர் சித்தார்த்தன்
ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க போகின்றார். இப்படி இருக்கும் நிலையில் முதல் முறையாக நடிகை நயன்தாரா மாதவனுக்கு ஜோடியாக நடித்து வருகின்றார். ஆனால், இதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை இணையதளத்தில் வெளியாகவில்லை…