இசை என்று சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வைப்பவர் இளையராஜா தான். இவருடைய இசையை கேட்காத ஆட்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு தனது இசையின் மூலம் பலரையும் இவர் கவர்ந்துள்ளார். மேலும், இயக்குனர் மிஷின்னும் இளையராஜாவின் தீவிர ரசிகர் நான் சிறுவயதில்
கடை தேர்வுக்கு செல்லும் பொழுது அன்னக்கிளி படத்தின் பாடலை கேட்டபோது அங்கேயே நின்று விட்டதாகவும். அதுதான் நான் கேட்ட முதல் பாடல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதன் பிறகு வளர்ந்தும் பக்கத்து வீட்டில் இருப்பவர் ஒருநாள் நிழல்கள் என்ற படத்தில் பாடல் கேசட்டை வாங்கி கேட்டுக் கொண்டிருந்தார்.
அவரிடம் சென்று அந்த கேசட்டை நானும் கேட்டுவிட்டு தருவதாக கூறி கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் அந்த பாடலை திரும்ப திரும்ப நான் கேட்டு வந்துள்ளேன். அதனால் என்னுடைய அம்மா மிகவும் கோபமாகி என்னை அடித்ததாக கூறியுள்ளார். இதற்கெல்லாம் இளையராஜா தான் காரணம் அவருடைய இசையின் காரணமாகத்தான் நான் என்று என்னுடைய அம்மாவிடம் அடி வாங்கினேன்…