நான் கலைஞர்களை வளர விட மாட்டேனா.? கமலை தாக்கி பேசிய நடிகர்..!!

0 137

நடிகர் கமல்ஹாசன் ஒரு சிறந்த நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் விக்ரம். மேலும், இவர் தமிழ் சினிமாவில் வெளிநாட்டில் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை முதன் முதலில் தனது படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதனைப் போன்ற பல கலைஞர்களுக்கு

 

தமிழ் வாழ்க்கை கொடுத்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் ஒரு சிலர் நடிகர் கமல் சுயநலவாதி நடிகர்களை வளரவே விட மாட்டார் என்று கருத்தை பரப்பி வருகின்றார்கள். அந்த வகையில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காதல் சுகுமாரன் ஒரு பேட்டியில் தனக்கு நடந்த அனுபவத்தை தெரிவித்துள்ளார்.

 

நான் காதல் திரைப்படத்தின் மூலம் ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டேன் எனக்கு வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்த பொழுது. அதே சமயத்தில் காதல் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு படத்தின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் நடந்துள்ளது.

 

அப்பொழுது கமல் சார் அவருடைய படத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்று நான் யோசித்தேன். அதன் காரணமாக நான் காதல் படத்தை நிராகரித்து உள்ளேன். ஆனால், இந்த விஷயம் எப்படியோ நடிகர் கமல் சாருக்கு தெரிந்து விட்டது. உடனே அவர் என்னை அழைத்து காதல் திரைப்படம்

 

இயக்குனர் சங்கர் தயாரிப்பில் உருவாகி வருகிறது. அதனால் அந்த படத்தில் நடிங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார். அதற்கு உங்கள் படத்தின் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கின்றது என்று கூறினேன். அதன் பிறகு காதல் திரைப்படத்தில் போய் நடிங்கள் நீங்கள் நடிக்கும் கதாபாத்திரம்

 

என்னுடைய படத்தில் உங்களுக்காக காத்திருக்கும். அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்த படப்பிடிப்பில் வந்து நடியுங்கள் என்று அவர் கூறியுள்ளார். எனக்காக என்னுடைய கதாபாத்திரத்தில் அனைத்தயும் வைத்து எடுக்காமல் வைத்திருந்தார்கள் என்று சமீபத்தில் அவர் தெரிவித்துள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.