தமிழ் சினிமாவில் எத்தனையோ கனவு கன்னிகள் இருந்து வருகின்றார்கள். அதில் தவிர்க்க முடியாத ஒரு 90 நடிகைகளின் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகை சினேகா. இவர் நடிகர் விஜய், அஜித், கமல், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட பல முன்னோடி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.
இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை போன்றவற்றில் நடித்து வருகின்றார். அந்த வகையில் சின்னத்திரை நிகழ்ச்சியில் தொலைக்காட்சி தொடரில் நடுவராக பணியாற்றி வருகின்றார்.
இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய போவதாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. மேலும், பிரசன்னா மூன்றாவது ஆண்டு டாக்டர் படிப்பு பயின்று வந்த பொழுது அதை விட்டு சினிமா மீது இருந்த ஆர்வத்தால் நடிக்க வந்துள்ளார். நடிகை சினேகாவும்
ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க ஆர்வம் இல்லை என்றாலும் ஒரு இரவு பார்ட்டிக்கு சென்ற பொழுதுதான் இயல்பான இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தான் இவர் ஒரு நடிகையாக மாறினார். ஏதோ வெளிநாட்டில் படபிடிப்பிற்கு சென்ற பொழுதுதான் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் உருவாகியது.
அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். இருவரும் சந்தோசமாக தான் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் எந்த ஒரு நிலையிலும் விவாகரத்து பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று பயில்வானே தெரிவித்துள்ளார்…