தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகர் விஷ்ணு விஷால் என்பவர். இவர் தனது முதல் படத்திலேயே பலரையும் கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு இவரது நடிப்பில் வெளிவந்த ஜீவா திரைப்படமும் நல்ல ஒரு வெற்றியை கொடுத்தது.
அதனைத் தொடர்ந்து இவர் தற்பொழுது கூறுகிய காலத்தில் விரைவில் வளர்ந்து வரும் நடிகர் என்ற இடத்தை பிடித்துள்ளார் நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடிக்காத காரணத்தினால் கொஞ்சம் கொஞ்சமாக மார்க்கெட் குறைய தொடங்கியுள்ளது. அதே சமயத்தில் தான் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறு
ஒரு பிரபலத்தை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு நடிகர் சூரிவுடன் ஏற்பட்ட பிரச்சனை இவருடைய சினிமா வாழ்க்கையில் பெரிய ஒரு பிரச்சினையாக மாறிவிட்டது. அதன் மூலம் இவருக்கு பட வாய்ப்புகளும் கிடைக்காமல் போய்விட்டது. சில காலங்கள் சரியாக பட வாய்ப்பு கிடைக்காமல் தவித்துக் கொண்டு இருந்தார்.
அந்த சமயத்தில் இவருக்கு கிடைத்த திரைப்படம் தான் கட்டா குஸ்தி. இந்த திரைப்படம் விஷ்ணு விஷாலுக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. அந்த திரைபடத்தை தொடர்ந்து தற்பொழுது நடிகர் ரஜினி மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் லால் சலாம் திரைப்படத்தின் நடிகர் விக்ராந்துடன்
இணைந்து நடித்து வருகின்றார். மேலும், இந்த திரைப்படம் விளையாட்டு மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும், அந்த திரைப்படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குனர் முரளி கார்த்திக் என்பவர் இயக்கத்தில் மோகன்டா சென்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மேலும், இது திரைப்படத்தை தனது சொந்த தயாரிப்பில் அவர் தயாரித்து வருகின்றார்.
மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த வருகின்றார். இந்த திரைப்படத்தை திரையரங்கில் வெளியிடாமல் ஓடிடி தளத்தில் வெளியிட முடிவெடுத்துள்ளார். கொரோனா காலத்திற்குப் பிறகு இந்த ஓடிடி தளம் தற்பொழுது பிரபலமாக இருந்து வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது ஜியோ நிறுவனம் புதிதாக ஓடிடி தளத்தை உருவாக்கியுள்ளது.
அதில் முதன்முறையாக நடிகர் விஷ்ணு விஷாலின் படம் தான் வெளியாக இருக்கின்றது. மேலும், வளர்ந்து வரும் நேரத்தில் இந்த முடிவு தேவைதானா என்று தற்பொழுது ரசிகர்கள் கேள்வியாக எழுப்பி வருகின்றார்கள். இருந்தாலும் தன்னுடைய சொந்த தயாரிப்பு என்ற காரணத்தினால் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று தெரிவித்து வருகின்றார்கள்…