விஜ ய் எங்க ளை பார் க்க வர வேண் டும் , எங்க ளி டம் நன் றாக பேச வே ண் டும் ..!! பெரு ம் ஏக்க த் தில் பே சிய எஸ் ஏ சந்தி ர சே கர் ..!! வெளி யா ன வீடி யோ வை பார் த்து கண் கல ங்கி ய ரசி கர் க ள் ..!!
தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் அவர்கள் . தற்போது இவரின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அப்படி சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் மாபெரும் சாதனை செய்து வருகிறது. இதை தொடர்ந்து தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் விஜய் .
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் ,ஷாம் போன்ற பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர் . மேலும் நடிகர் விஜய்யின் தந்தை தான் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் . இதையடுத்து ஒரு கட்டத்தில் விஜய் பற்றி பல சர்ச்சைகளை கிளப்பி வந்தார் எஸ்ஏ சந்திரசேகர்.
மேலும் தன்னுடைய மகனின் ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்ற எஸ் ஏ சந்திரசேகர் பதிவு செய்ததிலிருந்து இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது . இதனால் நடிகர் விஜய் அவ்வளவாக அவரின் அப்பாவிடம் பேசுவதில்லையாம் . இப்படியொரு நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர்,
பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதில் தன்னுடைய மகன் விஜய் குறித்து மனம் உடைந்து பேசியிருந்தார் . அந்த வகையில் அவர் கூறியதாவது , என்னுடைய ஒரே ஆசை விஜய் மாதத்திற்கு ஒரு முறையாவது எங்களை பார்ப்பதற்கு வரவேண்டும். எங்களிடம் ஹாய் பா , ஹாய் மா என்று எங்களின்,
தோள்களைத் தட்டிக் கொடுக்க வேண்டும் . அவர் படங்களில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் மாதத்திற்கு ஒரு முறை எங்களிடம் வந்து ஒரு அரை மணி நேரமாவது பேச வேண்டும் என்று ஏக்கத்தில் கூறியிருந்தார் எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் . தற்போது அவர் பேசிய வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அந்த வீடியோ பதிவினை பாருங்க…