கவி ஞர் வா லி எழு திய பாட லை கோ பத்தி ல் தூக் கி எறி ந்த எம் ஜி ஆர்..!! இ தற்கு என் ன கார ண ம் தெரி யு மா..?? பெருந் தன் மை யுடன் ந டந்து கொ ண்ட எம் ஜி ஆர் ..!! இணை யத் தில் வெ ளி யா ன சுவா ரி சிய தக வ ல் ..!!
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ஒரு சில நடிகர்கள் அறிமுகமான காலகட்டங்களில் தான் நடிக்கும் படத்தில் எந்த ஒரு இடையூறும் செய்யாமல் இருந்து வருவார்கள். பின்னர் தனக்கென ஒரு ரசிகர் கூட்டம் வந்து விட்டதும் கொஞ்சம் கொஞ்சமாக படம் தொடர்பான விஷயங்களில் மூக்கை நுழைக்க ஆரம்பித்து விடுவார்கள். மேலும் தனக்கு தகுந்தார் போல் பாடலாசிரியர் இப்படி தான் அந்த பாடலை எழுத வேண்டும்.அதுமட்டுமல்லாமல் ஒரு கட்டத்தில்,
தனக்கு போட்டியாக இருக்கும் நடிகரை தாக்கி பாடல்களையும் எழுதச் சொல்வார்கள் . இப்படி ஒரு சம்பவம் எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் நடந்துள்ளது . அந்த வகையில் அப்போதைய காலகட்டத்தில் பிரபல முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்த வந்தவர்கள் தான் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி .இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை,
என்பது போல் தான் இருக்கும் அவர்களின் நடிப்பு . அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர்கள் என்று கூட கூறலாம் . இப்படி இரு துருவங்களாக இருந்து வந்த இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் இருந்து வந்தது . என்னதான் இவர்கள் படம் தொடர்பாக போட்டி போட்டுக் கொண்டாலும் நிஜவாழ்க்கையில் இருவரும் நண்பர்களாகவே இருந்து வந்தனர்.
இதையடுத்து எம்ஜிஆர் அறக்கட்டளை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்கு கவிஞர் வாலி அவர்கள் பாடல் எழுதியிருந்தார். அப்போது ஆண்டவன் கட்டளை முன்னாலே என் அறக்கட்டளை என்னாகும் என்று எழுதி இருந்தார். பின்னர் இந்த பாடல் வரிகளை பார்த்த எம்ஜிஆர் கோபத்தில் வாலி எழுதிய பாடலை தூக்கி எறிந்து விட்டாராம் .
இதற்கு முக்கிய காரணம் அப்போது தான் சிவாஜி ஆண்டவன் கட்டளை என்ற படத்தில் நடித்திருந்தாராம். அந்த நேரத்தில் அவரை தாக்கும் விதமாக வாலி இது போன்று எழுதியிருந்தது எம்ஜிஆருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியதாம் . இதை ஒரு பேட்டி ஒன்றில் கவிஞர் வைரமுத்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…