பிரப ல இயக் குன ர் சொ ன்ன கதை யை கே ட்டு தூங் கிய வி ஜய் சேது பதி ..!! பின் னர் வெளி யா கி சூப்ப ர் ஹி ட்டடி த்த திரை ப்ப டம் ..!! அது வும் எந் த பட ம் தெரி யு மா ..?? வெளி யா ன சுவா ரி சிய தக வல் இ தோ ..!!
தற்போது தமிழ் சினிமா உலகில் இருக்கும் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் . சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . காதல் மற்றும் காமெடி கலந்து உருவான இந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்று கூட சொல்லலாம் .
இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கிறார் . இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நயன்தாரா, சமந்தா, பிரபு போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் . இந்த திரைப்படம் வெளியாகி நன்றாக ஓடி வருகிறது .
இதுவரை உலகளவில் 50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது . மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் விஜய் சேதுபதியும் ஏற்கனவே நானும் ரவுடி தான் என்ற சூப்பர் ஹிட் படத்தில் பணிபுரிந்த இருந்தனர். இரண்டாவது முறையாக வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால்,
மிகவும் சந்தோஷத்தில் இருந்து வருகிறாராம் விஜய் சேதுபதி. இந்நிலையில் நானும் ரவுடி தான் படம் குறித்த ஒரு சுவாரசிய தகவலை கூறியிருக்கிறார் நடிகர் விஜய்சேதுபதி . அந்த வகையில் நானும் ரவுடி தான் படத்தின் கதையை முதன் முறையாக விக்னேஷ் சிவன் கூறும் போது தூங்கிவிட்டாராம் விஜய்சேதுபதி .
அந்த அளவிற்கு அந்த கதையில் ஒன்றுமே இல்லையாம் . இவ்வளவு ஏன் கிளைமாக்ஸ் கூட முடிக்கப்படாமல் இருந்ததாம். இதன்பிறகு கதையில் ஒரு சில மாற்றங்கள் செய்து நானும் ரவுடிதான் என்ற பெயரில் வெளியாகி மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது என்று கூறியிருந்தார் விஜய் சேதுபதி…