16 வய தில் நடி க்க வ ந்த நடி கை யை ஏமா ற்றி கம ல் செ ய்த வே லை ..!! இத னா ல் கண் ணீர் விட் டு கத றிய நடி கை ..!! பல வருட ங்க ள் க ழித்து வெளி யான உ ண் மை தக வ ல் இ தோ ..!!
தமிழ் சினிமா உலகில் உலகநாயகன் என்ற அங்கீகாரத்தோடு வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன் அவர்கள். இவர் தன்னுடைய படங்களின் மூலம் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியவர். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் என்று கூட சொல்லலாம் . அப்படி இவரின் மாறுபட்ட நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாகி இருந்தது . அந்த வகையில் ஒரு திரைப்படம் தான் புன்னகை மன்னன் .
கடந்த 1986 ம் ஆண்டு இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் கமலுடன் இணைந்து ரேவதி, ஸ்ரீவித்யா ,ரேகா போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர் . இந்தத் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் தான் நடிகை ரேகா .
கடலோர கவிதைகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் இரண்டாவதாக இந்த படத்தில் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் நடிக்கும் போது நடிகை ரேகாவுக்கு வெறும் 16 வயது தானாம். இதையடுத்து இந்த படத்தின் இறுதிக்காட்சியில் தற்கொலை செய்து கொள்ளும் காட்சி ஒன்று வரும் . அந்த காட்சியில் கமலும், ரேகாவும் ஒருவருக்கு ஒருவர் மாறி பேசிக்கொள்வார்கள் .
அப்போது ஒரு முத்தக் காட்சி ஒன்று இருப்பதை ரேகாவிடம் கூறாமலேயே எடுத்துள்ளனர் படக்குழு. அந்த வகையில் கமல் மற்றும் ரேகா தற்கொலை செய்வதற்கு முன் பேசிக்கொள்வார்கள் . அப்போது திடீரென கமல் ரேகாவை இறுக்கி அணைத்தபடி உதட்டில் முத்தம் கொடுத்து விடுவார் . அப்போது ரொம்ப நேரம் ஆகியும் கூட முத்தம் கொடுப்பதை நிறுத்த வில்லையாம் கமல் .
இதனால் ரேகா , என்னிடம் இப்படி ஒரு காட்சி இருப்பதையே கூறாமல் எடுத்து விட்டீர்களே என்று படப்பிடிப்பு முடிந்ததும் அழுது கொண்டே இருந்தாராம். இது எங்கள் வீட்டுக்கு தெரிந்தால் என்னை என்ன நினைப்பார்கள் என்று கூறி அழுததாக அவரே ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…