புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகாவில், உள்ள விவசாய கிராமமான “புதுநிலைப்பட்டி” யில் நடைபெரும் “கேசினோ ராயல்”
ஊரின் முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் கணவரும் ஊர் அம்பலம் என்று அழைக்கப்படும் வெள்ளைச்சாமி என்பவர் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் ” சட்ட விரோதமாக சமூக விரோத செயல்களான சீட்டு, சூதாட்டம், 24 மணிநேரமும் மது, புகையிலை பான் பொருட்கள் போன்ற வசதிகளுடன் ஊருக்கு நடுவில் பெண்கள் குழந்தைகள் என்று அனைவரும் நடமாடும் பகுதியில் தினமும் பல ஆயிரங்கள் மற்றும் லட்சங்களில் பணம் வைத்து ஆடும் “சூதாட்ட கிளப்” நடத்தி வருகிறார்,
இதற்காக தினமும் பக்கத்து ஊர்களில் உள்ள தொழிலதிபர்கள் பணக்காரர்கள் மற்றும் சமூக விரோதிகள் என பலரையும் ஊருக்குள் அழைத்து வந்து இரவு பகல் பாராமல் இந்த செயலை செய்து வருகின்றார்.
இதனால் பெண்கள் உட்பட ஊர் பொதுமக்கள் அச்சத்துடனும் அறுவருப்புடனும் இருந்து வருகின்றனர்.
ஊரில் உள்ள இளைஞர்கள் பெரும்பாலானோர் வெளி மாவட்டங்களில் படித்து வருவதாலும் சிலர் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருவதாலும் யாரும் கேள்விகேட்பதில்லை என்பதால் துணிச்சலுடன் செய்து வருகிறார்.
ஏற்கனவே பள்ளிக்கூடத்தின் அருகே இந்த சீட்டாட்ட கிளப்பை நடத்தி பின் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரால் விரட்டியடித்ததால் தற்போது ஊரின் நடுவே வைத்துள்ளார்.
காலம் காலமாக விவசாயம் செய்து வந்த கிராமத்தில் சரியான மழை வராததாலும் நீர் ஆதாரங்கள் பராமரிப்பு இல்லாததாலும் ஊர் தனது பொழிவை இழந்து வரும் இந்த நேரத்தில் இவரின் இந்த செயல் பலருக்கும் மன வேதனையை ஏற்படுத்துகிறது.
இவரது தந்தை ஊரில் மரியாதைக்குரியவராக இருந்ததாலும் ஊர் தலைவரின் இது போன்ற செயல்களை வெளியில் சொல்வதால் ஊரின் பெயருக்கு கலங்கம் வருவதாலும் ஊர் மக்கள் இந்த சம்பவத்தை வெளியே சொல்ல வெட்கப்பட்டு தயங்குகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கனவே ஒரு நம்பர் லாட்டரி சீட்டு, குட்கா விற்பனை போன்ற சமூக விரோத செயல்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை தனிப்பிரிவு அமைத்து தொடர்ந்து செயல்படும் நிலையில் அதைவிட மோசமான இந்த கிராமத்தில் நடக்கும் சூதாட்டத்தை தடுத்து நிறுத்தி கிராமத்தை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும்.
Good… you have a will power to explore this kind of noicies.