“ ஆசிஃபா வழக்கில் இந்து-முஸ்லிம் சாயம் பூசப்படுகிறது. நான் ஒரு காஷ்மீரி பண்டிட். காஷ்மீரில் பிறந்தேன். நானும் இந்து சமூகத்தை சேர்ந்தவள் தான். அவ்வப்போது எனக்கே அதை நினைத்து வெட்கமாக இருக்கிறது.
நான் குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைக்காக பல காலமாக வேலை செய்து வருகிறேன். நான் இந்த வழக்கை முதலில் இருந்தே கவனித்து வந்தேன். எனக்கும் ஐந்து வயது பெண் குழந்தை இருக்கிறாள். பாதிக்கப்பட்ட சிறுமியை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருந்தது. எனவே, நானே அவர்களை சந்தித்து வழக்கை எடுத்துக் கொள்ள முன் வந்தேன்.
இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞராக நான் இருப்பதால் எனக்கு பல மிரட்டல்கள் வருகின்றன. நீதிமன்ற படிகளில் வைத்தே, வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் என்னை மிரட்டினார்.” என்கிறார் வழக்கறிஞர் தீபிகா ராஜாவத்.