இவனுக்கு என்ன கண்டதையெல்லாம் பதிவிடுவான்..! ஆனால் அதில் கவர்ச்சி இல்லாமல் எவன்தான் படிப்பான் என்று நினைப்பவனுக்கு இப்பதிவு..!
பிறப்பவனுக்கு
பசும்பால் இல்லை….
வாலிபனுக்கு
வசதி இல்லை….
திறமை இருந்தும்
பலன் இல்லை……
கல்வியில்
தரம் இல்லை……
கற்றவனுக்கு
வேலை இல்லை…….
கற்புக்கு பாதுகாப்பு
இல்லை…..
விவசாயத்திற்கு
தண்ணீர் இல்லை……
மருத்துவத்தில்
திருப்தி இல்லை…….
மாசு இல்லா
நாடு இல்லை……
உழவனுக்கு
உரக்கமில்லை……
ஊழலுக்கு
பஞ்சமில்லை…….
பூமிக்கு
மழை இல்லை……..
ஏழைகளுக்கு
வாழ வழியில்லை…….
ஓட்டுக்கு
மதிப்பில்லை………
ஓடுகிற நதிகள்
இங்கு இல்லை……
வெற்று அறிக்கை
குறையவில்லை…….
வேடிக்கை பார்ப்பவன்
சிந்திக்கவில்லை……
கரன்சியின் மதிப்பு
டாலருக்கு நிகரில்லை……..
டாஸ்மார்க்கில்
கூட்டம் குறையவில்லை…….
திருட்டுக்கு
முடிவில்லை……….
காவலுக்கு
கண்ணியமில்லை……
சட்டத்தில்
சத்தியமில்லை………
முதல்வருக்கு
பஞ்சமில்லை……….
இளைஞர்களிடம்
ஆட்சி இல்லை…….
மொத்தத்தில் வாழ வழியில்லை……..
வாழ்வை துறக்கவும்
மனமில்லை……..
எதுவும் சரியில்லை………
இதை சரிசெய்யவில்லை
என்றால்……
நாம் பிறந்ததில் பயனில்லை……..
இளைஞனே வா வா
ஒன்று சேர்வோம்
வல்லரசு இந்தியா,,,
வளர்ந்த தமிழகம்,,,,
உருவாக்குவோம்………..!