சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக ஜொலிப்பவர்கள் சூர்யா-ஜோதிகா. இந்த ஜோடி சேர்ந்து நடித்த அனைத்து படங்களுமே வெற்றி வாகை சூடி உள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து சில்லுனு ஒரு காதல், காக்க காக்க போன்ற பல படங்களில் நடித்துள்ளனர். இவர்கள் காதல் செய்து திருமணம் செய்து கொண்டவர்கள். இந்த ஜோடிக்கு தியா மற்றும் தேவ் என்ற இரு பிள்ளைகளும் உள்ளனர். இந் நிலையில் ஜோதிகா தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து சினிமாவில் கலக்கி வருகிறார்.
36, காற்றின் மொழி போன்ற பல படங்களில் இவரது நடிப்பு மிகவும் பாராட்டு பெற்றது. இந்நிலையில் தற்போது சமீபகாலமாக சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.இந்தப் படத்தினை ஷமீம் என்பவர், சில்லுக்கருப்பட்டி படத்தை இயக்கி மிகவும் பிரபலமானவர் இந்த படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மலையாள இயக்குனர் அஞ்சலி மேனன் தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.