ஒரு குளிர்பானம், அமிலம் போல கழிவறையை அதிக சுத்தம் செய்யும், துரு பிடித்த இரும்பை பளபளப்பாக்கும், பூச்சிக்கொல்லி கலந்திருப்பதால் விஷ தன்மையுடையது,
உடலுக்கு மிகுந்த தீங்கு விளைவிக்கும் என்பதெல்லாம் தெரிந்தும், எப்படித்தான் ஏதோ பழச்சாறு பருகுவது போல் உட்கொள்கிறார்களோ!
பெற்றோர்களும் தானும் குடித்து பிள்ளைகளுக்கும் சத்து டானிக் போல வாங்கி கொடுக்கிறார்களோ !
கடைகளில் அடுக்கி வைத்திருப்பதன் எண்ணிக்கையை பார்த்தால் இந்த விஷ குளிர் பானத்தின் விற்பனை சிறிதும் குறைந்த மாதிரி தெரியவில்லை.
இதில் கோடிக்கணக்கில் செலவு செய்து பிரபலங்களின் விளம்பரம் வேறு !
போகிற போக்கில் நமக்குத்தான் மனநலம் சரியில்லையோ ?
சந்தேகம் வருகிறது…?
உங்களின் மனநலம் எப்படி..?
செயற்கை குளிர்பானங்களை புறக்கணித்து இயற்கை பானாங்களை பருகுவோம்