வெள்ளைச் சர்க்கரை (சீனி ) மெல்லக்கொல்லும் வெள்ளை நஞ்சு! :

0 1,621

 

நாம் தினமும் உண்ணும் சர்க்கரையில் எவ்வளவு நச்சுத் தன்மை இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டால் நமக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும்.

நாம் காலையில் எழுந்தவுடன் குடிக்கும் டீ அல்லது காபியில் இருந்து இரவு படுக்கும் முன் குடிக்கும் பால் வரை நாம் சர்க்கரையைப் பயன்படுத்துகிறோம்.

இந்த வெள்ளைச் சர்க்கரை தயாராகும் விதத்தை நாம் தெரிந்து கொண்டால் அது உடலுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

இந்த வெள்ளைச் சர்க்கரை தயாரிக்க பயன்படுத்தும் இரசாயனப் பொருட்கள் மிகவும் ஆபத்தானவை.சர்க்கரை வியாதியஸ்தர்களின் எண்ணிக்கை இன்னும் 10 வருடங்களில் 70 மில்லியன்களைத் தொடும்’ என்கிறது பன்னாட்டுச் சர்க்கரை நோய்க் கழகம். பிறக்கும் போதே சர்க்கரை வியாதியுடன் பிறக்கும் குழந்தைகள் எண்ணிக்கையும் இளம் வயதில் மாரடைப்பால் இறந்து போவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துவருதற்கு மிக முக்கியமான காரணம் வெள்ளைச்சர்க்கரை என பல்வேறு மருத்துவ அறிக்கைகள் உறுதிப்படுத்திய நிலையில் வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

வெள்ளை சர்க்கரையில் உள்ள இரசாயன பொருட்கள்:

கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் நம் வீட்டு கழிப்பறைக்கு பயன்படுத்தும் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள். பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது.

இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல வைட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது.

சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே. தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது

தினமும் 24 தேக்கரண்டி சர்க்கரையை நாம் உணவில் சேர்த்தால், 92 சதவீத வெள்ளை ரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது.

இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும். உடலில் அதிகம் சர்க்கரை இருந்தால் அதை சுத்தப்படுத்த அதிகமாக ‘இன்சுலின்’ வெளியாக்கப்படுகிறது.

அளவுக்கு அதிகமாக வெளியாகும் ‘இன்சுலினுக்கும்’ நோய் எதிர்ப்புசக்தியை தடுக்கும் ஹார்மோன்களான, புரோஸ்டேகிளேன்டான்-க்கும் அதிக தொடர்பு இருக்கிறது.

இது புற்றுநோய் கட்டியை உருவாக்குகிறது. ‘கேன்டிடா எல்பிகன்ஸ்’ என்ற பெண் உறுப்பு தொற்றுநோயை, சர்க்கரை, இன்னும் அதிகளவு துரிதப்படுத்துகிறது. அளவுக்கு அதிகமாக ‘சுக்ரோஸ்’ உள்ள உணவு எலும்பில் கால்சியத்தை குறைத்து, எலும்பு முறிவு நோயை உண்டாக்குகிறது.

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு இயற்கையாகவே கால்சியம் சத்துக்குறைபாடு ஏற்படும். அந்த சமயத்தில் வெள்ளைச்சக்கரையை தவிர்ப்பது நல்லது.

வளர்ச்சி என்ற பெயரில் தொழில் நுட்பம் கொண்டுவந்ததுதான் வெள்ளைச் சர்க்கரை. உண்மையில் மதுவையும் புகையையும் போல தடை செய்யப்பட வேண்டிய பொருள் இந்த வெள்ளைச் சர்க்கரை. ஆனால் இன்று சர்க்கரை, உணவு அரசியலில் அரிசிக்கும் கோதுமைக்கும் அடுத்தபடியாக உள்ளது. உலகின் சர்க்கரை நோயில் நம்மை முதலிடத்தில் தள்ளியமைக்கும், பெருவாரியான பெண்களின் ஆஸ்டியோபோரோசிஸ் இடுப்புவலிக்கும், இன்னும் பல கான்சர் நோயின் வளர்ச்சிக்கும் வெள்ளை சர்க்கரை ஆற்றிய பங்கு அளப்பறியது. நாம் இனிப்பு சாப்பிடாதவர் அல்ல. நிறையவேசாப்பிட்டிருக்கிறோம்.

தஞ்சை நாயக்க மன்னரான விஜய ராகவ நாயக்கர் எழுதிய இரகுனாதப்யுதய நூலில் உள்ள இனிப்பு பட்டியலைப் பார்த்தால் ” அதிரசம், மோதகம், சாரத்லு, மிகடசட்லு(பாசந்தி), பன்னீர்பாயாசம், சீரகப்பாயாசம், குளிர் பாயாசம், திரட்டுப்பால், சீகரணி, தேங்காய்பால்” என லாலாக்கடையில் கிடைக்காத பெரிய பட்டியல் ஒரு வேளை உணவில் பரிமாறப்பட்டுள்ளது தெரிகிறது.

இனிப்புக்கள் அத்தனையும் அப்போது பனைவெல்லத்திலும், தேனிலும் தான் செய்யப்பட்டிருந்தன. வெள்ளை சர்க்கரையில்ல. எந்த வகையிலும் இந்த இயற்கையின் இனிப்புக்கு மாற்றாக வர இயலாத வெள்ளை சர்க்கரை தொழில் நுட்ப உதவியால் ஒட்டு மொத்தமாய் திணிக்கப்பட்டுவிட்டது.

ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.