ஏன் கண்ணை ஊசியால் குத்த வேண்டும்..? காரணம் இதோ..!
கண்ணை ஊசியால் குத்தணும்!
——————————————————–
* நல்ல சிவப்பாக,பளிச்சுனு துணியுடுத்தி,கொழுகொழுவென இருக்கும் குழந்தைகளைப் பார்த்தவுடன்,கன்னத்தைக் கிள்ளணும் போல் தோன்றும் மனதிற்கு…,
கருப்பாக, கந்தலான துணியுடுத்தி,ஏழ்மையை கண்ணிலேயே காட்டும் குழந்தைகளைக் கண்டாலே எரிச்சல் வருவது ஏனோ??
* உயர் அதிகாரிகள் அல்லது அரசியல்வாதிகள் என்ற போர்வையில், காலாணாவுக்கு பிரயோஜனம் இல்லாதவர்கள் வீட்டிற்கு வந்தால், இன்முகத்துடன் வரவேற்று உபசரிக்கும் மனதானது…,
தினமும் வீட்டிற்கு முன்னேயிருக்கும் சாக்கடையை அள்ளுபவன்,குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கேட்டால் மட்டும் முகம் சுளிப்பது ஏனோ??
* இலஞ்சம் கூசாமல் வாங்கிக் கொண்டும்,சக ஊழியர்களை மதிக்காமல் ஒருமையில் பேசும் ஒரு பெண் அதிகாரிக்கு, அவருடைய பதவியைக் கருத்தில் கொண்டு,அடிக்கடி வணக்கம் போட்டு வளைந்து போகும் ஆண்களின் மனதானது…,
அதே அலுவலகத்தில் கணவர் இறந்ததால்,வாரிசு வேலை பெற்று,
பிள்ளைகளைக் கரைசேர்ப்பதற்காக, வைராக்கியத்துடன் பணி செய்யும் விதவைப் பெண்ணை மட்டும் காம இச்சையுடன் அணுகுவது ஏனோ??
* வசதியான வீட்டில் மருமகள் கிடைத்துவிட்டால்,அவளுக்கு திருமணத்தன்று 20 சவரன் (அ)50 சவரனில் தாலிக்கொடி செய்து அழகு பார்க்கும் ஆண்வீட்டார்களின் மனதானது…,
சாதரண ஏழை வீட்டில் ஒரு பெண் இருந்தால், அவளை இரண்டாந் தாரமாகக் கட்டிக் கொள்ள மட்டும்,
பெண் கேட்பது ஏனோ??
“கனிவுடன் பார்க்க வேண்டிய கண்களானது, கவர்ச்சியை மட்டுமே பார்க்கிறதே!”
என்ன செய்யலாம்?
கண்ணை ஊசியால் குத்திட வேண்டியது தான்!
மைக்கேல் இராஜன்
ஒவ்வொரு வார்த்தையும் , மனதை வருத்தியது.
இனி எனது பார்வை நல்லது ஆகவே இருக்க முயற்ச்சிபேன் ….