மனிதர்களை விட மென்மையும், பாசமும் கொண்டவை மிருகங்கள். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.பொதுவாகவே மிருகங்கள் மூர்க்க குணம் கொண்டவை என்றே நாம் சொல்லி வழக்கப்பட்டு உள்ளோம். ஆனால் அவைகளை நாம் தொந்தரவு செய்யாதவரை, அவை நம்மிடம் அன்பு மழை பொழியக் கூடியவை தான். தமிழில் பிரபல திரைப்பட இயக்குநர் ராமநாராயணனின் பல படங்களிலும் யானை, நாய், குரங்கு, ஏன் பாம்பு கூட குழந்தைகளுக்கு உதவுவது போல் காட்சிகள் வரும்.ஹாலிவுட்டிலும் ஒரு பெண்ணின் மீது கிங்காங் பாசம் காட்டுவதும், ஜங்கிள்புக் சீரியலில் குழந்தை காட்டுக்குள் வளர்வதையும், மிருகங்கள் அதனுடன் நேசம் காட்டுவதையும் நாம் பார்த்திருப்போம்.
அதிலும் மதம் பிடித்துவிட்டால் கோபம் கொக்கரிக்கும் யானைகள் நிஜத்தில் அவ்வளவு சாந்த சொரூபமானவை. அதிலும் தன் பாகன்களிடம் மிகவும் நெருங்கிய உறவில் இருக்கும்.இங்கேயும் அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கேரளத்தில் யானைப் பாகன் ஒருவர் தான் வளர்க்கும் யானையிடம் வீட்டுக்குச் செல்லும்போது தான் வீட்டுக்கு போகட்டுமா என அனுமதி கேட்கிறார்.
யானையும் தலையை அசைத்து சம்மதம் சொல்கிறது. தொடர்ந்து பாகன் யானைக்கு முத்தம்கொடுத்துச் செல்ல பதிலுக்கு யானையும் அவர் மீது அன்பைப் பொழிந்து செல்கிறது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது