காரில் செல்பவன் பைக்கில் செல்பவனை நினைத்துப் பார்க்க வேண்டும். பைக்கில் செல்பவன் சைக்கிளில் செல்பவனை நினைத்துப் பார்க்க வேண்டும். சைக்கிளில் செல்பவன் நடந்து செல்பவனை நினைத்துப் பார்க்க வேண்டும் என பொதுவாக வட்டார வழக்கில் சொல்வதுண்டு. அதை அப்படியே மெய்ப்பிக்கும் வகையில் வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.பொதுவாகவே மனித மனம் எதிலுமே திருப்திபட்டுக்கொள்ளாது. எப்போதும் எது கிடைத்தாலும் அதற்கு மேல் இருக்கும் ஏதோ ஒன்றைத்தேடித்தான் மனம் அழையும்.
இந்நிலையில், இதையெல்லாம் உடைத்து மனித வாழ்வின் யதார்த்தத்தை உணர்த்தும்வகையில் ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகிவருகிறது.அதில் பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லாத, ஒரு காலும் ஊனமுற்ற ஒரு பொடிப்பையன் தன் விடாமுயற்சியால் காலாலேயே டயர் ஓட்டி விளையாடுகிறான்.
நமக்கெல்லாம் விளையாட்டாக மட்டுமே தெரியும் டயர் ஓட்டுவது கூட இந்த சிறுவனுக்கு காலால் ஓட்டும் அளவுக்கு மிகக் கஷ்டமானதுதான். இல்லாதவர்களைப் பார்த்து இருப்பதை வைத்து மகிழ்ச்சி அடையுங்கள் என்னும் கேசனோடு அது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.