தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளவர் சூர்யா. இவர் படத்திற்கு படம் தனது தோற்றத்தில் வித்தியாசம் காட்டி வருவதில் சிறந்தவர்.இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் சூரரைப்போற்று. முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்தப் படம் OTT ல் வெளியானது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்தாலும் இந்த கதை ரசிகர்களை திருப்தி பட செய்தது.விமானப் போக்குவரத்து சூழலை கருவாகக் கொண்ட இந்த படம் மிகப்பெரிய அளவில் தற்போது பேசப்பட்டு வருகின்றது. இந்த படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி என்ற நடிகை நடித்துள்ளார். இவர் தற்பொழுது தமிழக மக்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை இவரது நடிப்பால் பெற்றுள்ளார். இந்த படத்தில் அவர் பாலமுரளி பேக்கரி வைக்கும் பெண்ணாக நடித்து இருப்பார்.
அந்த பேக்கரியை மேலும் பிரபலம் அடைய செய்வதற்கு சூர்யாவும் சில சில இடங்களில் உதவி செய்வார். இந்தப்படம் உண்மை கதையை கருவாக கொண்டு எடுக்கப்பட்டது. இதில் உண்மையான ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் இன் சிம்ப்ளீ பிளை என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டது.
இந்த படத்தில் சூர்யாவின் மனைவியாக அபர்ணா பாலமுரளி பேக்கரி உரிமையாளராக நடித்திருப்பார். அதேபோன்று ஜிஆர் கோபிநாத்தின் நிஜவாழ்க்கையில் அவரது மனைவி நடத்திவந்த ஐயங்கார் பேக்கரி ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு மற்றும் புகைப்படம் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகின்றது.