ரூ.1,347 கோடி கரும்பு நிலுவைத் தொகையை பெற்றுத் தர வலியுறுத்தி, சென்னையில் முதல்வர் வீட்டு முன் மார்ச்-6 முதல் காத்திருப்பு போராட்டம் விவசாயிகள் நடத்தினர்..!
தமிழகத்தில் மாநில அரசு அறிவித்த கரும்புக்கான பரிந்துரை விலையை கடந்த நான்கு ஆண்டுகளாக சர்க்கரை ஆலைகள் வழங்கவில்லை. மொத்தமுள்ள 24 சர்க்கரை ஆலைகள் ரூ.
1,347 கோடி பாக்கி வைத்துள்ளனர். இதற்கான வட்டித் தொகை பலநூறு கோடி ஆகிறது. கூட்டுறவு, பொதுத் துறை ஆலைகள் ரூ.236 கோடி பாக்கி வைத்துள்ளனர். பல கட்ட போராட்டங்களை நடத்தியும், அரசுத் தரப்பில் சிறு நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை.
தற்போது சர்க்கரை ஆலைகள் மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். கரும்பு நிலுவையில், சொற்ப தொகையை கொடுத்துவிட்டு ஒவ்வொரு விவசாயியிடம் மிரட்டி, இதற்கு மேல் நிலுவைத் தொகையை கேட்க மாட்டோம் என்று ஒப்பந்தப் படிவத்தில் கையெழுத்து வாங்கி வருகின்றனர்.
கரும்பு நிலுவைத் தொகையில் ரூ.180 கோடியை மட்டுமே கொடுத்துவிட்டு,
1150 கோடிக்கு மேல் வழங்காமல் தனியார் ஆலை முதலாளிகள் மோசடி செய்கின்றனர். இதைத் தடுக்க வேண்டும் என்று, மாவட்ட நிர்வாகங்கள், மாநில சர்க்கரை துறை ஆணையர், காவல் துறை, மாநில தொழில் துறை அமைச்சரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கரும்பு ஆலைகள் விவசாயிகளை மிரட்டி வாங்கிய படிவங்களை திரும்பக் கொடுக்க வேண்டும். சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய ரூ.1,347 கோடி நிலுவையை, அரசு பெற்றுத் தர வேண்டும்.
பொதுத் துறை சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய ரூ. 236 கோடியை மாநில அரசு உடனே வழங்க வேண்டும்.