பிரின்ஸ்டனின் எதிர்காலம் என்ன..? தூத்துக்குடி துயரங்கள்..! கதிகலங்கவைக்கும் நிகழ்வு..!

0 335

பிரின்ஸ்டன்., வயது 21., தனியார் கப்பல் நிறுவனத்தில் பணி. மதியம் 1.30 மணிக்கு செல்லவேண்டிய பணிக்காக வீட்டை விட்டு 1 மணிக்கு கிளம்பினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தாண்டித் தான் செல்ல வேண்டும். தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் போய்க் கொண்டிருந்த போது வலது முழங்காலுக்கு மேல் எங்கிருந்தோ துப்பாக்கி குண்டு ஒன்று துளைக்க மயங்கிச் சரிகிறார்.

அருகிலிருந்தவர் ஒருவர் உதவிட அருகே இருந்த மண்டபத்தில் படுக்க வைக்கப்பட்டுள்ளார்.

அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் முழுங்காலுக்குக் கீழே காலினை அகற்றாவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அகற்றிவிட்டார்கள். தங்கள் ஒரே மகனின் நிலை கண்டு

அவரது தாயின் கதறல் எங்களின் மனதில் ஏற்படுத்திய வலியை என்னவென்று சொல்வது…?

You might also like

Leave A Reply

Your email address will not be published.