தூத்துக்குடி மக்களை துப்பாக்கி குண்டு துளைப்பதற்கு நீங்கள் ஒரு முக்கிய காரணம் என்று உங்களுக்கு தெரியுமா ?
தூத்துக்குடி தீர்வு – தற்சார்பு !
————————————————–
தூத்துக்குடி மக்களை துப்பாக்கி குண்டு துளைப்பதற்கு நீங்கள் ஒரு முக்கிய காரணம் என்று உங்களுக்கு தெரியுமா ?
ஆம்
காவலர்களை இயக்குவது அரசு
அரசை இயக்குவது பெருநிறுவனங்கள்
பெருநிறுவனங்களை இயக்குவது ?
வேறு யார் மக்களாகிய நாமே தான் !
எப்படி ? அந்நிறுவனங்களின் பொருட்களை பெற்று அதை தொடர்ந்து இயங்கச்செய்கிறோம்.
துப்பாக்கி குண்டு துளைப்பதற்கு நாம் ஒரு முக்கிய காரணம் என்று இப்பொழுது உவங்களுக்கு தெரிகிறதா ?
இங்கு நடூலலலிதக்கும் அத்தனை அழிவுத்திட்டங்களுக்கும் காரணம் நாம் தான் என்று இப்பொழுது உங்களுக்கு புரிகிறதா ?
ஒரு தனியார் கம்பெனிக்காக அரசு தன் நாட்டு மக்களையே சுட்டுக்கொள்ளும் பேரவலத்திற்கு காரணமே நாம் தான் என்று இப்பொழுது உங்கள் மண்டையில் உரைக்கிறதா ?
சரி இப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும் ? கார்ப்பரேட் பெருநிறுவன இயக்கத்தை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும்.
இதற்கு
மிக எளிமையான
மிக வலிமையான
வழி ஒன்று உள்ளது.
என்ன அது ? வெளிநாட்டு பொருட்களை வாங்காமல் உள்ளூர் பொருட்களை பயன்படுத்துவது தான் அந்த வழி.
இது தான் தனியார் கார்ப்பரேட் பெருநிறுவனங்கள் மற்றும் அரசின் கொட்டத்தை அடக்கும் மிகப் பெரிய வலிமையான போராட்ட வடிவம். இனி இப்போராட்ட வடிவத்தை தமிழக மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் கையில் எடுப்போம்.
முதலில் மாற்றத்தை உணவு மற்றும் அன்றாட பொருட்களில் இருந்து துவங்குவோம்.
இனி ஒரு துப்பாக்கி குண்டு நம் உயிரை துளைப்பதற்கு முன் தற்சார்பில் கால் அடி எடுத்து வைப்போம் வாருங்கள்.
நாம் தற்சார்பில் எடுத்து வைக்கும் ஒவ்வொறு அடியும் பெருநிறுவனத்திற்கு பேரிடியாக மாறும்.
பின் அரசின் கொட்டம் அடங்கி மக்களுக்கு செவி சாய்க்கும்.
உருவாக்குவோம் தற்சார்பு படையை
வீழ்த்துவோம் கார்ப்பரேட்டை.
அழிவுத்திட்டங்களில் இருந்து நாட்டையும்
நோய்களில் இருந்து மக்களையும் காக்க
இது ஒன்றே சிறந்த வழி.