“ஆடு, மாடு, ஒட்டகம், குரங்கு, நாய், புலி, சிங்கம் என அனைத்து பெண் உயிரினங்களுக்கும் சுகப்பிரசவம்தான். சவுதி அரேபியாவில் குழந்தைப் பெற்றுக்கொள்ளும் அனைத்துப் பெண்களுக்கும் சுகப்பிரசவம்தான். வயிற்றினைக்கீறி குழந்தையை எடுப்பதற்கு அங்கு அனுமதி இல்லை. அவ்வாறு கீறி குழந்தையை எடுத்தால் மருத்துவமனையின் அங்கீகாரம் இரத்து செய்யப்படும். தவிர்க்க முடியாத சூழலில் முறைப்படி அனுமதி பெற வேண்டும். இந்தியாவில் பணம் பறிப்பதற்காகவே வயிற்றைக் கீறி குழந்தையை வெளியே எடுக்கிறார்கள். இச்செயல் மருத்துவர்கள் மத்தியில் ஒரு தொற்று நோயாக இருந்து வருகிறது. கடுமையான சட்டத்திட்டம் மருத்துவத் துறைக்குத் தேவை” – திருத்தமிழ்த்தேவனார்.