எனக்காக பேச வார்த்தை இல்லாமல் போன மாதர் சங்கமே!
நான் போகிறேன்…
வாயில்லாமல் போன மனித உரிமை கமிசனே!
நான் போகிறேன்…
கூச்சமில்லாமல் அமைதி காக்கும் போலி வேஷதாரிகளே!
நான் போகிறேன்…
என்னை பாதுகாக்க துப்பில்லாத மத்திய,மாநில அரசுகள்!
ஒரு நாள் வரும் அது தான்
மறுமை நாள் அந்த நாளில்
என்னை கடந்து தான் நீங்கள்
ஒவ்வொரு நபரும் செல்லவேண்டும்!
நான் போகிறேன்…
இனி வரும் காலங்களில்வது என் போன்ற பிஞ்சு குழந்தைகளை பாதுகாக்க கற்று கொள்ளுங்கள்!
நான் போகிறேன்
என்னைப் படைத்த இறைவனிடம்!
நான் போகிறேன்…
உலகை விட்டு வைத்து,
நான் போகிறேன்
பெண்ணாக பிறந்ததால்
வாழாமலே
நான் போகிறேன்..
இறுதியாக ஒன்று… உங்கள் அனைவரிடமும் கேட்கிறேனீ
என்னை பெற்ற எடுத்த என் பெற்றோருக்கு என்ன பதில் சொல்ல போகிறேன்..?