இளைஞர்களை குறிவைக்கும் பிரபல இயக்குனர்..!! அடுத்த சர்ச்சையில் சிக்குவார் என்று எதிர்பார்க்கும் ரசிகர்கள்..!!
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பல திறமைகளை கொண்டிருப்பவர் தான் பார்த்திபன் என்பவர். இவர் சமீப காலமாக ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார். மேலும், அவர்களுக்கும் வித்தியாசமான திரைப்படத்தில் பெயர்தான் அதற்கு பெரிய ஒரு காரணமாக இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றார்கள்.
மேலும், ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு தன்னுடைய வித்தியாசமான கதையை காண்பிக்க வேண்டும் என்று அவர் போராடி வருகின்றார். ஆனால், அந்த திரைப்படம் தான் வெற்றி பெறாமல் போய்விடுகின்றது. இப்படி இருக்கும் நிலையில் ஒரு ஷாட்டில் படப்பிடிப்பு எடுத்தது தான் இரவின் நிழல்.
இந்த திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வெளியானது. ஆனால், இந்த திரைப்படம் பல சர்ச்சைகளை சந்தித்தது இது எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல். அடுத்த வேலையை பார்க்க போய்விட்டார். அப்படித்தான் அவர் அடுத்ததாக இளைஞர்களை குறி வைக்கும் வகையில் ஒரு திரைப்படத்தை
உருவாக்க முயற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார்கள். அந்த வகையில் கமர்சியல் திரைப்படங்களை தான் இனிமேல் எடுக்க போகின்றேன் என்று அவர் தெரிவித்துள்ளார். என்னுடைய அடுத்த படத்தின் பெயர் டீன். இந்த திரைப்படம் 13 முதல் 15 வரை வயதில் இருக்கும் பிள்ளைகளின் வாழ்க்கை மையப்படுத்தி
எடுக்க போகின்றேன் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் சந்திக்கும் நல்லது மற்றும் கெட்ட விஷயத்தை வெளிப்படையாக வேறு கோணத்தில் காட்ட இருப்பதாகவும் சமூகத்தில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கண்டிப்பாக அடுத்த ஒரு சர்ச்சையில் பார்த்திபன் சிக்குவார் என்று கூறப்படுகின்றது…