50 வருடத்தில் இந்த ஒரு விஷயத்தை நான் பார்த்ததில்லை.? ரஜினியே புகழ்ந்து பேசும் அளவிற்கு மிரள வைத்தவர் யார் தெரியுமா.?
சினிமாவில் தற்பொழுது நல்ல ஒரு வெற்றி திரைப்படங்கள் வந்தவுடன் அதனைப் பார்த்துவிட்டு அந்த இயக்குனர்களையும் அல்லது இந்த திரைப்படத்தில் நடித்த நடிகரையும் நேரில் அழைத்து நடிகர் ரஜினி பாராட்டி வருகின்றார். அப்படி இருக்கும் நிலையில் அவர்களுக்கு பரிசும்
ஒரு சிலருக்கு அளித்திருக்கின்றார். இப்படி இருக்கும் நிலையில் கந்தாரா திரைப்படத்தை இயக்கியவர் தான் ரிஷப் ஷெட்டி. இந்த திரைப்படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் பெரிய அளவு வரவேற்பு கொடுத்து வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் அடிப்படையில் அந்தத் திரைப்படத்தை கே.ஜி.எஃப் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரித்துள்ளது. மேலும், இந்த திரைப்படம் 16 கோடி அளவில் உருவாக்கப்பட்டது. அந்த திரைப்படம் பழங்குடி மக்களுக்கும் பண்ணையாருக்கும் இருக்கும்
பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கும். நடிகர் ரஜினிகாந்த் அந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு அந்த நடிகரை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் நடிகருடன் ரஜினிகாந்த் நீண்ட நேரம் கன்னடத்திலும் பேசியுள்ளார்.
மேலும், சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு வருமாறு இயக்குனரை அழைத்து அவரை நேரில் பார்த்தவுடன் மகிழ்ச்சியாக பேசி விட்டு அதன் பிறகு அவருக்கு தங்கச்செயின் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். இந்த தகவல் தற்போது ரசிகர் மத்தியில் வைரலாக பேசப்பட்டு வருகிறது…