ஹிந்தி சினிமாவில் நேர்மையே கிடையாது.? தேவையில்லாமல் பேசி சர்ச்சையில் சிக்கிய இயக்குனர்.. வெளுத்து வாங்கும் ரசிகர்கள்..!!
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு வெற்றியை இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் மிஸ்கின் என்பவர். இவர் தற்பொழுது நடிகர் விஜயுடன் இணைந்து லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதனை தொடர்ந்து அவரது இயக்கத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பில் பிசாசு இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாக்கப்பட்டு வருகின்றது.
மேலும், இவர் இயக்கம் திரைப்படங்கள் பெரும்பாலான வெற்றி படங்களாவே கொடுத்து வந்துள்ளார். அதன் காரணமாக இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகின்றது. சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் வெளிநாட்டில் எடுக்கப்படும் திரைப்படத்தில் பாடல்கள் இல்லாமல் இருப்பது போன்ற எடுக்கலாமே என்று கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது.
அதற்கு ஓ நாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படத்தின் பாடல்கள் இல்லை நானும் பெரிய அளவு பாடல்களை விரும்பமாட்டேன். ஆனால், வெளிநாட்டு திரைப்படம் போல் நம் சூழ்நிலைக்கு நம்முடைய படங்கள் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அங்கு இசைக்காகவே ஒரு தனி குழுவை இருக்கின்றது ஆனால் நம்முடைய இடத்தில் அப்படி கிடையாது.
இளையராஜாவின் இசை மட்டும் இல்லை என்றால் நம் வாழ்வு நாசமாகி இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். மேலும், தமிழை விட்டு மற்ற மொழியில் ஏன் செல்ல வேண்டும் என்று கேட்டதற்கு எனக்கு தமிழ் படம் எடுத்தாலே போதும். நான் ஆந்திராவிற்குச் சென்று ராஜ மோடியிடம் போட்டி போட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.
அட்லி போன்ற நானும் ஹிந்தியில் போட்டி போட முடியாது எனக்கு அது விருப்பமும் கிடையாது. மேலும், தமிழ் பார்வையாளர்கள் மிகவும் நேர்மையானவர்கள். ஆனால், ஹிந்தி சினிமாவில் அப்படி கிடையாது என்று வெளிப்படையாக பேசுவதாக கூறி சர்ச்சையில் இயக்குனர் மிஸ்கின் சிக்கி உள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது…