சிவ கார் த்தி கேய னை பற் றி மட் டும் என் னிட ம் பேசா தீங் க ..!! கடு ம் கோப த்தி ல் இரு ந்து வரு ம் நடி கர் தனு ஷ் ..!! நன் றி மறந் த சிவ கார்த் திகேய ன் ..!! வெளி யா ன உண் மை தக வ ல் ..!!
தற்போது தமிழ் சினிமா உலகில் பிரபல முன்னணி நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் தனுஷ் அவர்கள். ஆரம்பத்தில் நடிப்பிற்காக பல விமர்சனங்களை பெற்ற தனுஷ் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவரின் மனைவியை விவாகரத்து செய்த பின் வாழ்க்கையிலும் சரி ,சினிமாவிலும் சரி தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறார் நடிகர் தனுஷ் . அந்த வகையில் சமீபத்தில் வெளியான ,
ஜகமே தந்திரம் , மாறன் போன்ற திரைப்படங்கள் நடிகர் தனுஷுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை பெற்று தந்தது. இதையடுத்து ஒரு வெற்றிப் படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வாத்தி ,நானே வருவேன் , திருச்சிற்றம்பலம் போன்ற பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நடிகர் தனுஷ்.
இப்படி ஒரு நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய வேதனைகளை நண்பர்களுடன் பகிர்வது வழக்கமான ஒன்றாகும் . அப்படி இரவு பார்ட்டி ஒன்றில் மது போதையில் வேதனையுடன் தன்னுடைய கஷ்டங்களை கூறியிருக்கிறார். அப்போது நண்பர்களும் அவருக்கு ஆறுதல் சொல்லி இருக்கின்றனர்.
அந்த நேரத்தில் ஒரு நண்பர் சிவகார்த்திகேயனை பற்றி பேச, உடனே தனுஷ் சற்று கோபப்பட்டு நான் பார்த்து சினிமாவிற்கு வந்த பையன் அவன் , என்னுடைய தயாரிப்பில் எதிர்நீச்சல் படத்தில் நடித்து வெற்றி பெற்ற பிறகுதான் அவனுக்கு பல படங்களில் வாய்ப்பு கிடைத்தது . அப்படி இருந்தும் நான் செய்த உதவியை மறந்து,
அவனுடைய பத்தாண்டு சினிமா நிறைவு விழாவிற்கு யார் யாருக்கோ நன்றி சொன்னான் .ஆனால் என் பெயரை குறிப்பிட்டு ஒரு நன்றி கூட சொல்லத் தெரியாத நன்றி மறந்தவன் என்று கோபமாக பேசி விட்டாராம் நடிகர் தனுஷ். உடனே நண்பர்கள் அப்படியே பேச்சை திசைமாற்றி தனுசை சமாதானம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது…