என் னது ,பிரே ம ம் பட த் தில் முத லில் நடிக் க இ ருந்த து சா ய் பல் லவி இல் லை யா ..?? அட, இந் த முன் ன ணி நடி கை தா ன் அவரி ன் ரோ லி ல் நடிக் க இ ருந்த தா ..?? தற் போ து இ ந்த பட த்தி ன் இயக் குன ரே கூ றிய தக வ ல் ..!!

0 93

தற்போது தென்னிந்திய சினிமாவை கலக்கி  வரும் முக்கிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை சாய் பல்லவி . இவர் தற்போது தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் என்று மூன்று மொழிகளில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை  பெற்று வருகிறார். மேலும் சமீபத்தில் நானி  நடிப்பில் வெளியான ஷியாம்  சிங்க ராய் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் . இந்த படத்திலும் இவரின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது என்று கூட கூறலாம்.

இதைத்தொடர்ந்து தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார் நடிகை சாய் பல்லவி . தற்போது இவர் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.  இப்படி இவர் பிரபல நடிகையாக வருவதற்கு முக்கிய காரணம் இருந்தது கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான பிரேமம் என்ற மலையாள திரைப்படம் தான் .

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின், அனுபமா பரமேஸ்வரன் போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான இந்த படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் நடிகை சாய் பல்லவி .

இந்த படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து முதல் படத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்றார். ஆனால் சாய்பல்லவி நடித்திருந்த மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது வேறு ஒரு முன்னணி நடிகை தானாம்.அந்த வகையில் இந்த படத்தின் இயக்குனரான அல்போன்ஸ் புத்திரன் முதலில்,

நடிகை அசினை தான் அணுகியிருக்கிறார்.  ஆனால் அவரால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது . இதன் பிறகு தான் நடிகை சாய் பல்லவியை  மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தார் பிரேமம் படத்தின் இயக்குனர். இப்படி வெளியான தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.