கொ ழுப் பை குறை க்க சிகி ச்சை செ ய்த சீரி யல் நடி கை திடீ ர் மர ண ம் ..!! மரு த்துவ ர்க ளின் கவ னக் குறை வு இதற் கு கா ர ணமா ..?? பெற் றோ ர்க ள் குற் றச் சாட் டு ..!! வெளி யா ன ஷாக் கிங் த க வ ல் ..!!

0 777

தற்போது சினிமா உலகில் நடிகைகள் என்றாலே ஒல்லியாக தான் இருக்க வேண்டும்.  அப்போது தான் அவர்களுக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற பிம்பம் சினிமா துறை மட்டுமல்லாமல் தற்போது  சின்னத்திரையிலும் இருந்து வருகிறது . அப்படி ஒரு சில நடிகைகள் தங்களை அழகாக்க ஒருசில அறுவை சிகிச்சைகளை செய்து கொள்கின்றனர் .

ஆனால் ஒரு சிலர் அதன் பக்கவிளைவுகளை தெரியாமல் அழகிற்காக இப்படி செய்கின்றனர் . இப்படி ஒரு நிலையில் பிரபல கன்னட சீரியல் நடிகை ஒருவர் உடலில் இருக்கும் கொழுப்பைக் குறைப்பதற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட போது மரணமடைந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த வகையில் 21 வயதான நடிகை சேத்னா ராஜ் தன்னுடைய பெற்றோரின் அனுமதி இல்லாமலேயே பெங்களூரில் இந்த அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார் . தற்போது அவர் உயிரிழந்ததால் அவரின் பெற்றோர்கள் அறுவை சிகிச்சை செய்தவர்களின்  கவனக்குறைவு தான்,

என் மகளின்  உயிரிழப்புக்கு  காரணம் என்று குற்றம் சாட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சரியான உபகரணங்கள் இல்லாமலும் இந்த சிகிச்சையை செய்து இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது . ஆனால் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறியதாவது , அவரின் நுரையீரலில் தண்ணீர் ,

அதிகம் சேர்ந்தால் தான் மரணமடைந்தார் என்று கூறியுள்ளனர் . ஆனால் அந்த மருத்துவமனை மீது சட்டப்படி நான் வழக்கு போடுவேன் என்று நடிகையின் அப்பா கூறியிருக்கிறார் . இந்நிலையில் அறுவை சிகிச்சையால் இறந்துபோன நடிகையின் திடீர் மரணம் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.