டி ரா ஜே ந்தர் என் னை கட்டி ப்பி டி த்து கத றி அழு தா ர்..!! மேடை யி லே யே உண் மை யை கூறி ய க மல் ..!! இத ற்கு என் ன கா ரண ம் தெ ரியு மா ..?? என்ன வெ ன்று நீங் க ளே பாரு ங் க ..!!
டி ராஜேந்தர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ,இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் . இவர் கடந்த 1980ஆம் ஆண்டு வெளியான ஒரு தலை ராகம் என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் , நடிகராகவும் அறிமுகமானார். இப்படி வெளியான முதல் திரைப்படம் இவருக்கு மாபெரும் வரவேற்பை பெற்று தந்தது. பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ரயில் பயணங்களில், கிளிஞ்சல்கள் ,சட்டம் சிரிக்கிறது, தங்கைக்கோர் கீதம்,
உயிருள்ளவரை உஷா போன்ற பல ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து கொண்டார். இப்படி வெற்றிப்பட இயக்குனராக வலம் வந்த இவர் நடிகராகவும் பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் டி ராஜேந்திற்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார் .
இதில் மூத்த மகனான சிம்பு தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த விக்ரம் பட ஆடியோ விழாவில் நடிகர் சிம்புவும் கலந்து கொண்டார். மேலும் மேடையில் பேசிய சிம்பு கமல் குறித்து பல விஷயங்களை கூறிருந்தார் .
அப்போது டி ராஜேந்தர் குறித்து கமல்ஹாசன் கூறிருந்தது பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் அவர் கூறியதாவது, நான் அரசியலுக்கு வருவதாக முதலில் அறிவித்தபோது சிம்புவின் அப்பா டி ராஜேந்தர் என்னை சந்திக்க வந்திருந்தார். அப்போது திடீரென என்னை கட்டிப் பிடித்து,
அழ தொடங்கி விட்டார் . நான் என்னமோ ஏதோ என்று பயந்து விட்டேன் . இதன் பிறகுதான் அவர் கூறினார், என்னால் எப்படி சினிமா இல்லாமல் இருக்க முடியும் என்று நினைத்து தான் அவர் கண்ணீர் விட்டு இருக்கிறார் என்று கமல் அந்த மேடையில் கூறியிருந்தார் . இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…