எஸ் பி பி பா டி யும் தி ரு ப்தி இல் லா மல் கம லை பட சொன் ன இ ளை யரா ஜா ..!! பின் னர் சூ ப் பர் ஹிட் டடித் த பா டல் ..!! எந்த படத் தி ல் தெ ரி யுமா ..?? வெளி யா ன சு வாரி சிய தக வ ல் இ தோ ..!!
தன்னுடைய இனிமையான குரலால் தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டவர் தான் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் ,இந்தி ,மலையாளம் போன்ற பல மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி இருக்கிறார். மேலும் இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷன் ,பத்மவிபூஷன் போன்ற விருதுகளையும் வென்றுள்ளார் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் .
தன்னுடைய மென்மையான குரலால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வைத்திருந்தார். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களிலும் பாடல் பாடியிருக்கிறார் .மேலும் இவர் பெரும்பாலும் இளையராஜாவின் இசையில் பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது .
இப்படி பிரபலமான எஸ் பி பி பாடிய பாடல் திருப்தி இல்லாததால் வேறு ஒரு நடிகரை வைத்து பாடவைத்து ஹிட் கொடுத்துள்ளார் இளையராஜா அவர்கள். அந்த வகையில் 1989 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அபூர்வ சகோதரர்கள் . இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .
இந்த படத்தில் இடம்பெற்ற ராஜா கைய வச்சா என்ற பாடலை முதலில் எஸ் பி பாலசுப்பிரமணியம் தான் பாடியிருக்கிறார் . ஆனால் இந்தப் பாடலில் எஸ் பி பி யின் குரல் திருப்தி இல்லாததால் , பின்னர் கமல்ஹாசன் அந்தப் பாடலை பாடியிருப்பார். இதையடுத்து கமல் குரலில் வந்த பாடலைத்தான்,
நாம் அந்த படத்தில் கேட்டு வருகிறோம். இப்படி வெளியான இந்த பாடலும் மாபெரும் ஹிட்டடித்தது என்று கூட கூறலாம்.மேலும் உலகநாயகன் கமல்ஹாசன் நடிகர் மட்டுமல்லாமல் பாடகராகவும் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.அதில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது…