தொ டர்ந் து நான் கு மு றை ரஜி னியு டன் நடி க்கு ம் வா ய்ப் பை ..!! வே ண்டா ம் எ ன்று ம றுத்த முன் னணி நடி கை ..!! இதற் கு என் ன கா ரண ம் தெரி யு மா ..?? வெளி யா ன உ ண் மை தக வல் இ தோ ..!!

0 390

தற்போது தமிழ் சினிமா உலகில் பிரபல மூத்த நட்சத்திரமாக இருந்து வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . தன்னுடைய ஸ்டைலான நடிப்பாலும் ,மாசான வசனங்களாலும் ரசிகர்களிடம் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார் ரஜினிகாந்த் . மேலும் சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை .

இதையடுத்து தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இப்படி பிரபலமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிப்பது பல நடிகைகள் போட்டி போட்டு வந்த நிலையில் ஒரு நடிகை மட்டும் அவருடன் நடிக்க நான்கு முறை மறுத்து உள்ளாராம் . அவர்தான் நடிகை ஐஸ்வர்யாராய்.

இவர் தமிழில் வெளியான இருவர் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதை தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார் . இதையடுத்து இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி,

கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வைக்க ஐஸ்வர்யா ராயை தான் தேர்வு செய்தார்களாம். ஆனால் அதையும் அவர் மறுத்து விட்டாராம்.  பின்னர் இதனை தொடர்ந்து பாபா ,சந்திரமுகி ,சிவாஜி போன்ற படங்களில் நடிக்க கூறியதற்கும் அவர் மறுத்து விட்டாராம்.  பின்னர் கடைசியாக தான் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில்,

உருவான எந்திரன் படத்தின் கதையை கேட்டு பிடித்துப் போனதால் ரஜினியுடன் நடித்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தற்போது ரஜினி நடிக்க இருக்கும் தலைவர்  169 படத்திலும் ஐஸ்வர்யா ராயை  நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த  தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.