அட, கா மெ டி நடி கர் பாண் டியி ன் மனை வி இவ ர் தா னா ..?? இவ் வள வு நா ளா இது தெ ரி யாம போ ச் சே ..!! மு தல் முறை யாக வெ ளி யான அழ கிய ஜோடி யின் புகை ப்ப டம் இ தோ..!!
பாண்டி ஓர் பிரபல தமிழ் திரைப்பட காமெடி நடிகர் ஆவார் . இவர் கடந்த 2000ம் ஆண்டு வெளியான கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் . பின்னர் இதனை தொடர்ந்து நாகேஸ்வரி, சிங்காரச் சென்னை, கில்லி ,ஆட்டோகிராப், தீக்குச்சி போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் . இதையடுத்து கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான அங்காடி தெரு என்ற படத்தின் மூலம்,
மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலம் ஆனார் நடிகர் பாண்டி . இந்த படத்தில் இடம்பெறும் இவரின் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு தான் வருகிறது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கல்லூரி காலங்கள் ,வேலாயுதம் ,நீர்ப்பறவை ,சாட்டை ,வணக்கம் சென்னை, ஜில்லா போன்ற பல படங்களில் நடித்து,
தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார் . மேலும் இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையில் மெட்டி ஒலி , கோலங்கள் போன்ற சீரியலில் நடித்துள்ளார் .அதுமட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் மூலம் பெரிதும் பிரபலமானார் என்று கூட கூறலாம் .
மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இதையடுத்து பத்மினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் நடிகர் பாண்டி . 7 வருடமாக இருவரும் காதலித்து வந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இப்படியொரு நிலையில் நடிகர் பாண்டியின் மனைவியின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது .இதை பார்த்த ரசிகர்கள் இவர் தான் நடிகர் பாண்டியன் மனைவியா.? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே என்று கூறிவருகின்றனர் .இதோ அந்த அழகிய ஜோடியின் புகைப்படம் நீங்களும் பாருங்க…