எ ன் பெ யரை சொ ல்லி கூப் பிடு வதற்கு உன க்கு எ ன்ன அரு க தை இரு க்கு ..!! கோ பத்தி ல் பேசி ய தேவ யா னிக் கு தக் க பதி லடி கொ டுத் த மணி வண் ண ன் ..!! என்ன வென் று நீங் க ளே பாரு ங் க ..!!
90களின் காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. அப்போது புகழ்பெற்ற நடிகையாக இருந்த இவர் விஜய் ,அஜித் ,சூர்யா, விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார். இதனிடையே இயக்குனர் ராஜகுமாரன் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர் .
பின்னர் படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைந்த உடன் சீரியல்களில் நடித்து வருகிறார் நடிகை தேவயானி.இந்நிலையில் தேவயானி குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை இயக்குனர் களஞ்சியம் ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் . அந்த வகையில் அவர் கூறியதாவது , தேவயானியை வைத்து நான் ,
பூமணி என்ற படத்தை இயக்கி இருந்தேன். அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது போட்டோ ஸ்டில் எடுக்கும் பூபதி என்பவர் தேவயானி இங்க திரும்புங்கள் என்று கூறிவிட்டார். உடனே தேவயானி நீங்கள் எப்படி என்னை பெயர் சொல்லி கூப்பிடலாம் என்று கோபப்பட்டார் . பின்னர் இயக்குனர் மற்றும் கேமராமேன் தவிர,
என்னை யாரும் தேவயானி என்று கூப்பிட கூடாது . ஒரு சாதாரண போட்டோகிராபர் தானே ஒழுங்கா என்னை மேடம்னு கூப்பிடுங்கள் .முதலில் அப்படி சொன்னதற்கு நீ என்னிடம் மன்னிப்பு கேளு என்று தேவயானி கூறிவிட்டார் . இதன் பிறகு முரளி சாரும் போய் தேவயானியை சமாதானப்படுத்தினார் .
அப்போதும் தேவயானி சமாதானம் ஆகவில்லை. இதன் பிறகு சில நாட்கள் கழித்து படப்பிடிப்பில் நடிகர் மணிவண்ணன் கலந்து கொண்டார் .அப்போது படப்பிடிப்பிற்கு வந்தவுடன் எங்க இருக்காங்க அந்த பொண்ணு , அவங்கள வர சொல்லுங்க என்று கூறினார் . பின்னர் தேவயானி வந்தவுடனே ,
மணிவண்ணன் சார் கேட்ட முதல் வார்த்தையே எதுக்குமா பெயர் வைக்கிறார்கள் , பெயர் வைப்பதே கூப்பிடுவதற்கு தானே , இவங்க எல்லாம் கூப்பிடனும் இவங்க எல்லாம் கூப்பிடக் கூடாதா என்று பெயர் வைப்பார்கள் . அதனால் நீ இப்படி நடந்து கொண்டதற்கு நீ தான் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கூறினார் .
இதன் பிறகு படப்பிடிப்பில் அந்த ஆல்பம் ரெடி ஆனதும் எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தோம் .பின்னர் தேவயானி அந்த ஆல்பத்தை பார்த்தவுடன் மிரண்டுபோய் பூபதியை பார்த்து என்னை மன்னித்து விடுங்கள், உங்களின் திறமை புரிந்து கொள்ளாமல் நான் உங்களை தவறாக பேசிவிட்டேன் என்று அவரிடம் மன்னிப்பு கேட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…