இய க்குன ர் அட் லி கேட் ட சம்ப ள த்தா ல் என க்கு பட மே வே ண்டா ம் என்று கூறி ய பி ரபல நடி கர் ..!! அதுவு ம் எவ் வ ளவு சம்ப ள ம் கேட் டா ர் தெ ரியு மா ..?? வெளி யான தக வ லை க ண்டு அதிர் ச்சி யான ரசி கர் க ள் ..!!

0 253

தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர்தான் இயக்குனர் அட்லி அவர்கள் . ஆரம்பத்தில் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அட்லி ராஜாராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  இப்படி வெளியான இவரின் முதல் படமே இவருக்கு மாபெரும் வரவேற்பை பெற்று தந்தது .

பின்னர் இந்த வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து படத்தை இயக்கும் வாய்ப்பு அட்லிக்கு அமைந்தது. அப்படி வெளியான தெறி  என்ற திரைப்படமும் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது . பின்னர் தொடர்ச்சியாக இரண்டு முறை அட்லிக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார் நடிகர் விஜய்.

அந்த வகையில் வெளியான மெர்சல் மற்றும் பிகில் போன்ற திரைப்படங்கள் அட்லீக்கு மட்டுமல்லாமல் விஜய்க்கும் ஒரு தனி அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது என்று கூட கூறலாம் . இதையடுத்து தற்போது அட்லி ஹிந்தியில் சாருக் கான் படத்தை இயக்கவுள்ளார் .

அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.  இந்தப் படத்தில் ஷாருக்கான், நயன்தாரா ,யோகிபாபு போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடிக்க உள்ளனர் . இப்படி ஒரு நிலையில் இயக்குனர் அட்லியை தெலுங்கு பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் தன்னுடைய அடுத்த படத்திற்காக,

கதை சொல்லும்படி அழைத்திருக்கிறார் . அப்போது அட்லி தனக்கு சம்பளமாக 35 கோடி ரூபாய் வேண்டும் என்று கூறியிருக்கிறார் . இதைக்கேட்ட அதிர்ச்சியான அல்லு அர்ஜுன் அவ்வளவு சம்பளம் எல்லாம் சாத்தியமே இல்லை என்று கூறி அனுப்பி வைத்து விட்டாராம். இப்படி வெளியான தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.