பிர பல நடி கை யை இப் படி நடிக் க சொ ன் ன இய க்கு னர் ..!! பி ன் னர் அதி ல் வடி வேலு வை மா ட்டி விட்ட நடி கை ..!! எ ந்த பட த் தில் தெரி யு மா ..?? தற் போ து அவ ரே கூறி ய தக வ ல் ..!!
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்து வந்த நடிகைகள் ஒருகட்டத்தில் அம்மா கதாபாத்திரம் துணை கதாபாத்திரம் என்று நடித்து வருவார்கள் . அப்படி அதிகம் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் நடிகை சரண்யா பொன்வண்ணன் . இவர் கடந்த 1987 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான நாயகன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் .
இப்படி வெளியான முதல் படத்திலேயே கமலுடன் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார் நடிகை சரண்யா பொன்வண்ணன். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மனசுக்குள் மத்தாப்பு ,என் ஜீவன் பாடுது, அஞ்சலி, அக்னி பார்வை, கருத்தம்மா, சீவலப்பேரி பாண்டி போன்ற பல படங்களில் நடித்து வந்தார் .
பின்னர் ஒரு கட்டத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு குறைந்த உடன் அம்மா கதாபாத்திரம் ,குணச்சித்திர கதாபாத்திரம் என்று நடித்து வந்தார் நடிகை சரண்யா பொன்வண்ணன் . அந்த வகையில் கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான என் மகன் என்ற படத்தில் நடித்திருந்தார் .
மேலும் இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருதையும் பெற்றார் . இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் எம் மகன் படம் பற்றிய சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார் . அந்த வகையில் அவர் கூறியதாவது, அந்த படத்தில் ஒரு காட்சியில் கோவிலுக்கு வெளியில்,
உருளுவது போன்று ஒரு காட்சி அமைந்திருக்கும். அதை இயக்குனர் என்னிடம் கூறியதும் 100 பேர் பார்க்கும் இடத்தில் எனக்கு அவமானமாக நினைத்து என்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன் . ஆனால் இயக்குனர் என்னை வற்புறுத்தினார் . ஒரு கட்டத்தில் வடிவேலு என்னிடம் வந்து நானே இதில் நடிக்கிறேன் ,
என்று கூறிவிட்டார் .ஆனால் இயக்குனர் நீங்கள் செய்தால் தான் நன்றாக இருக்கும் என்று கூறினார் .பின்னர் ஒரே ஒரு டேக் தான் கொடுப்பேன் , ரீடேக் எல்லாம் கேட்கக்கூடாது என்று கூறினேன் . பின்னர் பல டேக்குகள் போனாலும் அந்த காட்சி நன்றாக வந்தது .
மேலும் அப்படி அந்த காட்சி மட்டும் இல்லை என்றால் எனக்கு அந்த சிறந்த நடிகைக்கான விருதே கிடைத்து இருக்காது என்றும் கூறியிருந்தார் நடிகை சரண்யா பொன்வண்ணன் . இந்நிலையில் அவர் பேசிய வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …