திடீ ரென தூ க்கி ட்டு தற் கொ லை செய் து கொ ண்ட 21 வ யது இ ளம் நடி கை ..!! இவ ரின் இற ப்பிற் கு என் ன கார ண ம் தெரி யு மா ..?? வெ ளி யான ஷாக் கி ங் தக வல் இ தோ ..!!

0 357

கேரள மாநிலத்திலுள்ள காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான் நடிகை மற்றும் மாடலான சஹானா. இவர் மாடல் அழகியாக பல நகை விளம்பர படங்களில் நடித்து வந்தார் . இவர் ஒரு சில படங்கள் மற்றும் சீரியல்களிலும் நடித்துள்ளார் . மேலும் கோழிக்கோட்டை சேர்ந்த சஜாத்  என்பவரை கடந்த ஆண்டு சஹானா திருமணம் செய்து கொண்டார். இப்படி திருமணமான இவர் தனது கணவர் வீட்டில் வசித்து வந்தார் .

மேலும் சஜாத் உடன் சேர்ந்து மாமியார் மற்றும் மைத்துனர் தன்னை சித்திரவதை செய்வதாக சஹானா தன்னுடைய குடும்பத்தினரிடம் புகார் அளித்தார்.  இதையடுத்து தனது மகள் சஹானா அவரது கணவர் சஜாத் உடன் தனிக்குடித்தனம் செல்ல அவரது தாய் கூறினார்.  இதையடுத்து  சில வாரங்களுக்கு முன்பு தான் ,

கோழிக்கோடு நகரில் வாடகை வீட்டில் குடியேறினார்கள் .இப்படி ஒரு நிலையில் நேற்று முன் தினம்  தன்னுடைய 21 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் நடிகை சஹானா. இந்நிலையில் அன்று  இரவு ஜன்னல் கிரிலில்  தூக்கிட்டு தொங்கிய நிலையில் அவரின் உடல் கண்டு எடுக்கப்பட்டுள்ளது .

பின்னர் போலீசார் நடிகையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சஹானாவின் கணவர் தொடர்ந்து பணம் கேட்டு அவரை கொடுமைப்படுத்தி வந்ததாகவும், அவருடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் யாரும் இங்கு வரக்கூடாது , தொலைபேசியிலும் பேசக்கூடாது என்று சஹானாவை,

கொடுமைப்படுத்தி வைத்திருந்ததால் தான் இப்படி அவர் செய்தார் என்று சஹானாவின் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்திருந்தனர் . அதுமட்டுமில்லாமல் அவருடைய மரணத்தில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது என்றும் அவரின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.  இதைத் தொடர்ந்து தற்போது போலீசார் இதை  தீவிரமாக  விசாரணை நடத்தி வருகின்றனர்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.