43 வய தா கியு ம் நடி கை ஸ் ருதி ரா ஜ் திரும ண ம் செய்த த ற்கு கார ண ம் இ து தா னா ..?? முத ல் மு றை யா க மன ம் திற ந்து பே சிய நடி கை ..!! வெளி யா ன ஷா க்கி ங் தக வ ல் இ தோ ..!!

0 362

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை வெள்ளித்திரையில் கொடி கட்டி பறந்த நடிகைகள் ஒரு கட்டத்தில் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றவுடன் சீரியலுக்கு வந்துவிடுகின்றனர் . அந்த வகையில் பல நடிகைகளை கூறலாம் . அந்த வரிசையில் ஒருவர் தான் நடிகை ஸ்ருதி ராஜ்.  இவர் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியான அக் ராஜன் என்ற மலையாள படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் . பின்னர் இதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான,

மாண்புமிகு மாணவன் என்ற படத்தில் நடித்து தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து இனி எல்லாமே சுகமே ,காதல் டாட் காம், மந்திரன் ,ஜெர்ரி , இயக்கம் போன்ற பல தமிழ் படங்களில் நடித்திருந்தார் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

பின்னர் ஒரு கட்டத்தில் இவருக்கு படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு குறைந்த உடன் சின்னத்திரைக்கு வந்தார் நடிகை ஸ்ருதி ராஜ் .அந்த வகையில் முதன்முறையாக தென்றல் என்ற சீரியலில் நடித்து இருந்தார். பின்னர் இதனை தொடர்ந்து ஆபீஸ் ,அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் ,அழகு, தாலாட்டு போன்ற பல சீரியல்களில் நடித்து வந்தார் .

மேலும் இவர் அழகு என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார் . தற்போது இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு என்ற சீரியலில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் 43 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் நடிகை ஸ்ருதி ராஜ். இதைப்பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கேட்டதற்கு நடிகை ஸ்ருதி ராஜ் கூறியதாவது ,

என்னுடைய வாழ்க்கையில் நான் எந்த ஒரு விஷயத்தையும் திட்டம் செய்து செய்தது கிடையாது. அப்படி அதை நான் செய்தாலும் அது சரியாகவே நடக்காது . அதனால் தான் என்னுடைய திருமணத்தைப் பற்றியும் நான் எந்த ஒரு முடிவும் எடுக்காமல் இருக்கிறேன் என்று கூறியிருந்தார். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.