நடி கை என்ப தா ல் என க்கு மாப் பிள் ளை யே கி டைக் கல ..!! இவ ருக் கு இப் படி யொ ரு நிலை மை யா ..?? திரு ம ணமா காம ல் தவி த்து வரு ம் பிர பல நடி கை ..!! இவ ரா என்று ஆச் சிரி யத் தில் ரசி க ர் க ள் ..!!

0 682

கங்கனா ரனாவத் ஓர் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.  இவர் கடந்த 2006ம் ஆண்டு வெளியான கேங்ஸ்டர் என்ற இந்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  இதனைத் தொடர்ந்து கடந்த 2008ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம்தூம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை கங்கனா ரனாவத் . இப்படி வெளியான இந்த திரைப்படம் இவருக்கு மாபெரும் வரவேற்பை பெற்று தந்தது .

இதன் பிறகு பல வருடங்கள் கழித்து மீண்டும் தமிழில் தலைவி என்ற படத்தில் நடித்திருந்தார் . இந்த படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும் .மேலும் இவர் தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பல முறை வென்றிருக்கிறார் நடிகை கங்கனா ரனாவத் .தற்போது இவர் தாக்கட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் ஏஜென்டாக நடிகை கங்கனா ரனாவத்  நடித்துள்ளதாக கூறப்படுகிறது . இந்நிலையில் அந்த படத்தின் மேடையில்  பேசிய இவர் ,

தனக்கு ஏன் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதை கூறியிருக்கிறார் . அந்தவகையில் அவர் கூறியதாவது, தன்னைப் பற்றி தவறான பல வதந்திகள் பரவுவதால் தன்னை திருமணம் செய்து கொள்ள யாரும் முன்வரவில்லை.  நான் ஆண்களை அதிகம் தாக்குகிறேன் , அதிகம் சண்டை போடுகிறேன் என்று சில வதந்திகள் வருவதால்,

என்னுடைய பெயர் இப்படி கெட்டு விட்டது . ஆனால் நான் நிஜ வாழ்க்கையில் மிகவும் அமைதியான பெண். இதுவரை நான் யாரையும் அடித்தது கூட கிடையாது . இப்படி ஒரு சிலர் வதந்திகள் பரப்பி வருவதால் எனக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை கிடைப்பது கூட சிரமமாக இருந்து வருகிறது என்று கூறியிருந்தார் நடிகை கங்கனா ரனாவத்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.