கமல் ஹாச னி ன் முத ல் ம னை வி இவ ர் தா னா..?? அ ப் போ இ ரண் டா வது மனை வி தா ன் சரி கா வா ..?? இத் த னை நா ளா இ து தெ ரி யாம போ ச் சே ..?? யா ருன் னு நீ ங்க ளே பா ரு ங்க ..!!
கமல்ஹாசன் ஒரு பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . இவர் தன்னுடைய ஒவ்வொரு படங்களின் மூலம் ஒவ்வொரு விதமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார் என்று கூட கூறலாம் . அதுவும் குறிப்பாக தமிழ் சினிமாவில் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வைத்த பெருமையும் இவரையே சேரும். இதனிடையே கமல்ஹாசன் சரிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமான இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர் .
பின்னர் ஒரு சில ஆண்டுகளிலேயே சரிகாவை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார் கமல்ஹாசன் .தற்போது சரிகா பணம் இன்றி தவித்து வருவதாக சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் கமலின் முதல் மனைவி குறித்த தகவல் வெளியாகியுள்ளது . அந்த வகையில் கடந்த 1978ஆம் ஆண்டு வாணி கணபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார் கமல்.
ஆனால் இவர்களும் ஒரு ஆண்டுகளிலேயே பிரிந்துவிட்டனர் . இதன் பிறகு தான் சரிகாவை திருமணம் செய்து கொண்டார் கமல் . பின்னர் அவரை விவாகரத்து செய்து கௌதமியுடன் திருமணமாகாமல் 13 ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். இதன் பின்னர் இவர்களும் பிரிந்தார்கள். இப்படி நிலையில் பேட்டி ஒன்றில் பேசியிருந்த கமலின் முதல் மனைவி வாணி கணபதி கூறியதாவது,
இந்தியாவில் விவாகரத்திற்காக தரப்படும் ஜீவனாம்சத்தால் ஒருவர் திவாலாகி விடுவாரா அல்லது விவாகரத்துப் பெற்ற பெண் வாழ்நாள் எல்லாம் தன்னை காப்பாற்றிக் கொள்ளும் அளவிற்கு அந்த தொகை அவளுக்கே கிடைக்கிறதா . மேலும் கமலுடன் வாழ்ந்த 10 ஆண்டுகளில் வாடகை வீட்டில்தான் வசித்து வந்தோம் .மேலும் எங்களுக்கு சொந்தமான வீட்டில் சில காலம் இருந்தோம் .
விவாகரத்துக்கு பின்னர் கமல் நான் வாழ்ந்த வீட்டில் நான் சம்பாதித்து வாங்கிய பொருட்களை கூட என்னை எடுக்க விடவில்லை . எப்போதும் யார் மீதாவது பழி போட முயற்சிப்பார் . ஆனால் நான் கமலின் திறமையை மதிக்கிறேன். ஆனால் அவர் திறமைசாலி என்பதற்காக யார் மீது வேணாலும் பழி போடுவதை என்னால் அனுமதிக்க முடியாது என்று கூறியிருந்தார் வாணி கணபதி…