பண மின் றி தவி த்து வ ரும் க மலி ன் முன் னா ல் மனை வி சரி கா ..!! மக ள் கள் நடி கை யாக இரு ந் தும் கஷ் டப்ப ட்டு வரு ம் அ வல ம்..!! தற் போ து அவ ரே கூறி ய ஷா க் கிங் தக வ ல் ..!!
தமிழ் சினிமா உலகில் மூத்த நடிகராக வலம் வருபவர் தான் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள். இவர் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர் ,தயாரிப்பாளர் ,அரசியல்வாதி என்று பன்முகம் கொண்டவராக விளங்குகிறார். இதனிடைய நடிகை சரிகாவை திருமணம் செய்து கொண்டார் நடிகர் கமல்ஹாசன் . திருமணமான இவர்களுக்கு ஸ்ருதி ஹாசன் அக்சரா ஹாசன் என்று 2 மகள்கள் உள்ளனர் . இவரின் மனைவி சரிகா ஒரு பிரபல பாலிவுட் நடிகை ஆவார் .
அதுமட்டுமில்லாமல் ஆடை வடிவமைப்பாளர் ஆவார் . மேலும் கமல்ஹாசன் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் வெளியான ஹேராம் திரைப்படத்திற்காக சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது . பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2004ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர் .
இதன்பிறகு நடிகை சரிகா ஆங்கிலம் மற்றும் இந்தி படங்களில் நடித்து வந்தார் . இப்படி ஒரு நிலையில் நடிகை சரிகா லாக் டவுன் நேரத்தில் பணத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டு இருந்ததாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அந்த வகையில் அவர் கூறியதாவது,
என்னுடைய இரு மகள்களும் பெரிய பெண்ணாக மாறி சினிமாவில் நடிகையாக வலம் வரும் நிலையில் நான் மிகவும் கஷ்டப்பட்டேன் . ஆரம்பத்தில் நான் தியேட்டர் ஆர்டிஸ்ட் . அந்த வகையில் நான் மீண்டும் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறேன் . சுமார் ஐந்து ஆண்டுகளாக நாடகங்களில் நடித்து வருகிறேன்.
ஒரு நாளைக்கு 2000 முதல் 2700 ரூபாய் வரை தருவார்கள் . அதை வைத்துதான் கடந்த 5 ஆண்டுகளாக என்னுடைய வாழ்க்கையை ஓட்டி வருகிறேன் என்று அந்தப் பேட்டியில் கூறியிருந்தார் நடிகை சரிகா . இப்படி இவர் கஷ்டப்படும் நிலையில் கூட இவரை கமல்ஹாசன் கண்டுகொள்ளாமல் இருப்பது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது…