விஜ ய் சிக ரெட் பிடி க் கும் போ து நா ன் தா ன் கம் பெனி க்கு போ வே ன் ..!! வெளி ப்ப டை யாக போ ட்டு டை த்த பிரப ல இய க்கு னர் ..!! வெ ளி யான தகவ லை கண் டு ஷாக் கா ன ரசி க ர் கள் ..!!

0 176

தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராகவும், ஒளிப்பதிவாளராக இருந்து வருபவர் தான் விஜய்மில்டன். இவர் விஜய் நடிப்பில் வெளியான பிரியமுடன் என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். பின்னர் இதனை தொடர்ந்து நெஞ்சினிலே, சாக்லேட் ,சாமுராய், காதலுடன், ஆட்டோகிராப் ,காதல் போன்ற பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வந்தார்.  இவர் அதிகம் விஜய் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் ஒரு கட்டத்தில் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் .  பின்னர் இதனை தொடர்ந்து  கோலிசோடா என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.  குறிப்பாக பல மொழிகளில் திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து பத்து என்றதுக்குள்ள, கடுகு, கோலிசோடா 2 போன்ற படங்களை இயக்கியிருந்தார். தற்போது விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமாரை வைத்து மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தை இயக்கி வருகிறார் . இப்படியொரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர்,

நடிகர் விஜய் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை கூறியிருக்கிறார். அந்தவகையில் அவர் கூறியதாவது, நானும் விஜய்யும் மிகவும் நெருக்கமான நண்பர்களாக இருந்து வந்தோம் . சொல்லப்போனால் படப்பிடிப்பு சமயத்தில் விஜய் தனியாக தம்மடிக்க போவார் , அவர் கூட நான் தான் அப்போது கம்பெனிக்கு போவேன் .

மேலும் விஜய்யின் நெருங்கிய நண்பர்கள் நான்கு பேர் வந்தால் படப்பிடிப்பில் அவர்களுடன் மட்டும் தான் பேசுவார். இவ்வளவு ஏன்  கதாநாயகிகள் கூட விஜய் பேச மாட்டார் . அவ்வளவு அமைதியாக இருப்பார் . ஆனால் தற்போது விஜய் நிறைய மாறி விட்டார் என்று இந்த பேட்டியில் கூறியிருந்தார் விஜய்மில்டன் அவர்கள்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.