வடி வே லுவுட ன் என் னா ல் நடிக் க முடி யா து என் று கூ றிய இ ளம் நடி கை ..!! இத னா ல் பெரு ம் மன வுளை ச்ச லுக்கு ஆ ளான வடி வே லு ..!! அ ந்த நடி கை யா ர் தெ ரி யுமா ..?? வெளி யா ன முக் கிய தக வ ல் இ தோ ..!!
வடிவேலு ஒரு நகைச்சுவை நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். இதனிடையே இயக்குனர் ஷங்கருக்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நடிகர் வடிவேலு பல வருடங்களாக எந்த ஒரு படங்களிலும் நடிக்காமல் இருந்து வந்தார் . இதையடுத்து அந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்து தற்போது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில்,
நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிக்பாஸ் சிவானி ,லொள்ளு சபா மாறன், ரெடின் கிங்ஸ்லி ,சிவாங்கி போன்ற பல நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளனர் . மேலும் இந்த படத்தில் நடிக்க வைப்பதற்கு முதலில் நடிகை பிரியா பவானி சங்கரை தான் அணுகியுள்ளனர் படக்குழு .
தற்போது நடிகை பிரியா பவானி சங்கர் வளர்ந்து வரும் கதாநாயகியாக இருந்து வருவதால் இந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டாராம். இதனால் வடிவேலு அவர்களை கட்டாயப்படுத்த வேண்டாம் வேறு ஒரு நடிகையை இந்த கதாபாத்திரத்திற்கு போட்டு விடலாம் என்று கூறியிருக்கிறார்.
பின்னர் பிரியா பவானி சங்கர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் அந்த கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு மீண்டும் அந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம் . அப்படி அவர் கூறியதாவது , நான் வடிவேலுவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று தான் கூறினேன் .
ஆனால் இந்த மாதிரி கதாபாத்திரம் என்றால் என்னால் நடிக்க முடியும் என்று படக்குழுவினரிடம் கூறினாராம் .ஆனால் வடிவேலுவோ நம்ம கூட ஜோடி போட்டு நடிப்பதற்கு இப்படி தயங்குகிறார்களே என்ற மன வேதனையில் இருந்து வருகிறாராம் . இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …