மருத்துவமனை சேவை என்பதை தாண்டி தற்போது யுத்தத்தில் இறங்கியுள்ளது எச்சரிக்கை..!
குழந்தைப்பேறு இன்மை… இன்றைக்கு ஆண், பெண் இருபாலரையும் வாழ்வில் பல சிக்கல்களை எதிர்கொள்ளவைக்கும் தீவிரமான பிரச்னை. `குழந்தை இறைவன் கொடுக்கும் வரம்’. இந்த எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு.
குழந்தைவேண்டி சாமிக்கு நேர்ந்துகொள்வதும், கோயில் கோயிலாகச் சென்று பிரார்த்திப்பதும் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் பலர் தவறாமல் செய்யும் வேலை. இன்னொரு பக்கம் இன்ஃபெர்ட்டிலிட்டி மையங்களில் குவியும் தம்பதியரின் எண்ணிக்கையும் அதிகமாகிவருகிறது.
`குழந்தை இல்லையா… பெண்ணிடம்தான் பிரச்னை இருக்கும்’ என்கிற தவறான நம்பிக்கை இன்னும் குறைந்தபாடாக இல்லை. ஆணிடமும் இருக்கலாம். ஆணின் விந்து பலம் இல்லாமல் இருப்பதும் இந்தப் பிரச்னைக்குக் காரணமாக இருக்கலாம். இதற்கான சிகிச்சையோடு, ஆண்களுக்கு உரமூட்டும் உணவுகள் சில இருக்கின்றன. அதைத் தொடர்ந்து சாப்பிடுவதால் ஆண்களின் விந்தணு முழுமையான சக்தி பெறும்.
குழந்தை வேண்டும் என முடிவெடுத்தாகிவிட்டது. எந்தக் கருத்தடை சாதனமும் பயன்படுத்தாமல் தொடர்ந்த கூடல். ஆனால், கருவுறுவதில் பிரச்னை. இது நாளாக நாளாக தம்பதியரிடம் ஏமாற்றத்தையும் நம்பிக்கையின்மையையும் அதிகரித்துக்கொண்டே செல்லும். விளைவாக, குழப்பமான வாழ்க்கைமுறை, மனஉளைச்சல் எல்லாம் உண்டாகும்.
இந்த சந்தர்ப்பத்தில் கணவன், மனைவி இருவருமே தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வதுதான் நல்ல தீர்வைத் தரும். ஆணுக்கு பிரச்னை எனும்பட்சத்தில், சிகிச்சையோடு நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் சிலவற்றை சேர்த்துக்கொள்வதும் விந்து பலப்பட உதவும். உணவு மட்டுமே ஆண் தன்மைக்கு பலம் சேர்த்து, குழந்தைப்பேறு உண்டாகக் காரணமாகிவிடாதுதான்.
ஆனால், பொருத்தமான உணவை சேர்த்துக்கொள்வது விந்தணுவை முழுமையடையச் செய்யும்.
தக்காளி, கேரட் ,பூண்டு, புளித்த உணவான மோர் தயிர்,பழையகஞ்சி இவையெல்லாம் அதிகம் பயன்படுத்தினால் ஆண்மை அதிகரிக்கும்..!