ஒரு மரம் என்பது நூற்றுக்கணக்கான ஏன் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ கூடியது.
ஒரு மரத்தை வெட்டினால் நூறு செடிகளை நட வேண்டும் என்ற சட்டமே வினோதமானது. எல்லா செடிகளும் நகரமயமாதல் போன்ற பிரச்னைகளையும் தாண்டி இருக்கும் தண்ணீர் பற்றாக்குறையில் எப்போது வளர்ந்து பெரிய மரமாகும் என்பதே பெரிய கேள்வி..?
வெட்டப்படும் மரத்தின் ஆயுள் காலத்தையும் கணக்கெடுத்தால் வெட்டப்படும் ஒரு மரத்திற்கு நூறு செடி நடுவது என்பது மாற்றாக முடியாதது.
எனவே அரிய விலங்குகளை சிறப்பான சட்டங்கள் மூலம் அழியாமல் காப்பது போல் மரங்களையும் காப்பாற்றும் நிலைக்கு தள்ள பட்டிருக்கிறோம் என்பதை உணர்வோமா..?