கடைசி காலம் வரை கூரை கூட சரி இல்லாத வீட்டில் வாழ்ந்து மறைந்த MLA ..!!! இப்படி ஒரு மனிதரா ஊரே ஒன்று கூடி வழியனுப்பிய சம்பவம்
காமராஜர் ஆட்சி காலத்தில் பெரம்பலூர் அருகே உள்ள வெங்கலம் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த மணி என்பவர் வயது முதிர்வின் காரணத்தினால் உடல்நலக்குறைவால் காலமானார்.இவர் கடந்த 1962-ஆம் ஆண்டிலிருந்து 1967 ஆம் ஆண்டு வரை காமராஜர் அரசியல் இருந்த நேரத்தில் திருச்சி மாவட்டத்தில் வெங்கலம் சட்டமன்ற தொகுதியில் திமுக எம்எல்ஏ வாக இருந்தார்.எளிமையான மனிதராக மக்களுக்கு தொண்டு செய்து வந்துள்ளார். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் இவருடைய குணத்தை அறிந்த மக்கள் இவர் மீது பிரியமாக இருப்பார்களாம். தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல் அனைத்தையும் கணக்கில்லாமல் மக்களுக்கே செய்தாராம் மணி.
இவருடைய மகன்கள் ஹோட்டலில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்களாம் இவருடைய மகள் அங்கன்வாடியில் உதவியாளராக பணி புரிகிறாளாம்.தனது கடைசிக் காலம் வரை கூரை கூட சரியில்லாத வீட்டில் சாதாரண மனிதராக எளிமையாக வாழ்ந்தா ராம் மணி.
20 நாட்களுக்கு முன்தான் மணியின் மனைவி கருப்பாயி இ ற ந் து விட்டாராம்.மனவேதனையில் இருந்த மணி உடல்நிலை பாதிக்கப்பட்டு இ ற ந் து விட்டாராம்.தனக்கென்று எதையும் சேர்க்காமல் மக்கள் அன்பை சேர்த்த மணிக்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தினார்களாம்.
திமுக முன்னாள் எம்எல்ஏ என்பதால் திமுகவின் கட்சிக்கொடி அவர் உடல் மீது போர்த்தி முரசொலி நாளிதழ் வைக்கப்பட்டு அவருடைய இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டதாம்.