20 வயதில் வருவது தானா காதல் 60 வரையில் தொடர்வது தானே காதல். என கார்த்திக் நடித்த ஹரிசந்திரா படத்தின் நாடோடி பாட்டுப் பாட என்னும் பாடலில் ஒரு வரி வரும். அதை அப்படியே மெய்ப்பிக்கும் வகையில் கேரளத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.பொதுவாக இன்றெல்லாம் மின்னல் வேகத்தில் காதலிக்கிறார்கள். அதே வேகத்தில் பிரிந்தும் விடுகிறார்கள். பரஸ்பரம் இருவரும் புரிதல் இன்றி வாழ்வதே இதற்கு காரணம் ஆகும். இதேபோல் எத்தனையோ திருமணங்கள் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பெண்ணும், மாப்பிள்ளையும் போனில் பேசி சண்டை போட்டே நின்று இருக்கின்றன. இன்றைய காலத்தில் கணவன், மனைவி இடையே சின்ன கருத்துமோதல் வந்தாலும் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் வரை சென்று விடுகின்றனர்.
இப்படியான சுழலுக்கு மத்தியில் கேரளத்தில் ஒரு தாத்தா, பாட்டி இன்னும் கூட காதல் ரசம் சொட்ட, சொட்ட வாழ்கின்றனர். மிகப்பெரிய தங்கள் கூட்டு குடும்பத்தை தங்கள் கட்டுக்குள் வைத்து பராமரிக்கின்றனர். கடந்த ஒணத் திருநாள் அன்று தன் மொத்த குடும்பத்தின் முன்பு இந்த தாத்தாவும், பாட்டியும் ஒரு முழு மலையாள பாடலுக்கும் செம ஆட்டம் போட்டனர்.
டிவி நிகழ்ச்சிகளில் சொல்வதைப் போல அவர்கள் இருவருக்கும் செமையாக ஹெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது. அதற்கு காரணமே இருவருக்கும் இடையே இருக்கும் அதீத அன்பு தான். அதிலும் அந்த தாத்தா ஆட்டத்தில் அப்படியொரு எனர்ஜி. இதோ நீங்களே வீடியோவை பாருங்களேன்.