அடுத்த தலைமுறைக்கு கிடைக்குமா இந்த சந்தோசம்? உங்க வாழ்வில் இதை அனுபவித்து இருக்கிறீர்களா? வீடியோ பாருங்க.. புரியும்..!

0 425

சில தருணங்கள் தவறவிட்டு விட்டால் வாழ்வில் திரும்பவே கிடைக்காது. அப்படி ஒன்று தான் தாத்தா_பாட்டிகளோடு இருப்பது!

சின்னஞ்சிறு வயதில் குழந்தைகளுக்கான உச்சகட்ட பொழுதுபோக்கு, நண்பர்கள் யார் எனக் கேட்டால் தாத்தா, பாட்டி என சொல்லிவிடலாம். தாத்தா மடியில் இருந்து கதை கேட்காத குழந்தைகளே இருக்காது. பாட்டியின் கைபிடித்து மிட்டாய் வாங்கி வந்த குழந்தைகள் தான் நாம். தாத்தாக்களின் சைக்கிளிலோ, ஸ்கூட்டரிலோ முன்னாள் நின்று கொண்டு சென்ற பொடிசுகள் இங்கு அதிகம்.தாத்தா, பாட்டிகளும் வீட்டில் இருக்கும் பேரக்குழந்தைகளின் மீது உயிரையே வைத்து உள்ளனர். ஆனால் இதெல்லாம் நம் தலைமுறையும், இந்த தலைமுறையும் அனுபவித்தது. அடுத்த தலைமுறைக்கு கிடைக்குமா என கேள்வி எழுந்துள்ளது. காரணம், இன்று கூட்டு குடும்ப உறவுமுறையையே சிதைத்துவிட்டோம்.

கணவன், மனைவி தாண்டி தாத்தா, பாட்டிகளை பலரும் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு ரிலாக்ஸ்டாக இருக்கிறார்கள். இன்னொருபுறத்தில் இன்று கம்யூட்டர் உலகு ஆகிவிட்டது. குழந்தைகள் செல்போனிலும், மடிகணினியிலும் உலகைப் பார்க்கின்றன. இதனாலும் தாத்தா, பாட்டியின் மடியில் கிடந்து விளையாடும் வாய்ப்பை தவறவிடுகின்றனர்.

இதோ இந்த வீடியோவைப் பாருங்கள். தன் விவசாயி தாத்தாவின் முதுகில் ஏறி குஸ்தி அடித்து விளையாடுகிறது இந்தக் குழந்தை.அடுத்த தலைமுறைக்கு இந்த ஆனந்தமெல்லாம் கிடைக்குமா? இதோ நீங்களே வீடியோவைப் பாருங்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.